.

Pages

Wednesday, December 18, 2013

அதிரை சிஎம்பி வாய்கால்,குளங்களை நேரடி ஆய்வை மேற்கொண்ட பொதுப்பணித்துறை அலுவலர் !


அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவதற்காக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்று. இதற்காக அதிரை சிஎம்பி வாய்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் மேடுகள் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் குறித்து பார்வையிட இன்று பகல் கோட்ட உதவி செயற்பொறியாளர் முஹம்மது இக்பால் அவர்கள் நேரடி ஆய்வை மேற்கொண்டார். இதில் நீர் கொண்டுவரும் பாதைகளை கண்டறிந்தார். 

ஆய்வின் போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் சமூக ஆர்வலர்கள் N.M. முஹம்மது அப்துல்லா, M.S. அஹமது அமீன், அதிரை நியூஸ் சாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.





2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. சி.எம்.பி வாய்க்கால், காட்டாற்றின் குறுக்கிலிருந்து இயந்திரங்களின் உதவியால் தூர்வாரப்பட்டு வருகிறது, மகிழ்சிக்குறிய பாராட்டத்தக்க விஷயம். இத்தூர்வாரும் பணி இன்றோ அல்லது நாளையோ சி.எம்.பி லைனை வந்தடையும், அது சமயம் அப்பகுதியின் மிகுதியான வீடுகளின் கழிவு நீர் இணைப்புகள் அந்த ஆற்று நீர்(?) வாய்க்காலில் பொருத்தப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் வாய்க்காலாக அது காட்சியளிக்கிறது. அவ்வாறு காட்சியளிக்கும் அவ்வாய்கால் தூர்வாரப்படும்பொழுது அந்த கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தெருவில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது, மேலும் அந்த கழிவு நீரானது தூர்வாரப்பட்ட பின் வரக்கூடிய ஆற்று நீரில் கலக்கும் அபாயமும் உள்ளது. இதை பேரூர் நிர்வாகம் கருத்தில் கொண்டு அக்கழிவு நீர் செல்வதற்கு மாற்றுப்பாதையை பேரூர் நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது குடியிருப்போரிடம் வசூலித்தோ மாற்றியமைக்க வேண்டும், இல்லையெனில் குளங்களுக்கு வரும் தண்ணீர் சாக்கடை நீர் கலந்து சுற்றுப்புறச்சூழலையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்த வாய்ப்புள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.