அதிரையில் சமூக ஆர்வலர்கள் தண்ணீருக்காக கரங்கோர்த்துள்ள இன்றைய நல்ல சூழ்நிலையில் நாம் சென்ற வருடம் இரு பாகமாக எழுதிய தொடரை மீள்பதிவு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என கருதுகிறோம்.
அதிரை அமீன்
(மீள்பதிவு)
அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1
ஆனால்
அதிரையில் 'ஏகப்பட்ட குளங்களை காணல' என்பது உண்மையிலும் உண்மைங்க ஆனா புகார் தான் யாரும் பண்ணலீங்க.
கர்நாடக அரசியலுக்கும், காவிரி தண்ணீருக்கும், காவிரியின் கடைமடையான அதிரையின் ஏரி, குளங்களுக்கும் நேரடி தொடர்பிருக்குங்க. அந்தக்கால அரசியல்வாதி காமராஜ் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு இருந்த நீர்வள அக்கரையில் 1 சதவீதம் கூட இந்தக்கால (மறைந்த)குல்லா, தாத்தா, ஐயா, அம்மாக்களுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதை கீழே வரும் படத்தை பார்த்தாலே தெரிஞ்சுக்குவீங்க.
முடிந்தவரை ஏரி குளங்களை அதன் ஒரிஜினல் பெயரிலேயே குறிப்பிட்டுள்ளேன், சிலவற்றை அதன் தெரு மற்றும் இடங்களின் பெயரால் அடையாளப்படுத்தியுள்ளேன். விபரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னால் திருத்திக்குவேனுங்க.
அதிரையின் குளியல் குளங்கள் எல்லாம் காலவதியாகி கீழே வரும் வெறும் 3 குளங்கள் மட்டுமே குளியலுக்காக பயன்பாட்டில் இருப்பது அதிர்ச்சிகரமான செய்திங்க.
CMP வாய்க்கால்ல தண்ணீர் வரலைன்னு குளியல் போட்ட குளங்களை காயப்போட்ட நாம மாற்று ஏற்பாடுகளாய் நமதூரை சுற்றியுள்ள ராஜாமடம் காட்டாறு, ராஜாமடம் ஏரி, மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி, மாளியக்காடு செல்லிக்குறிச்சி ஏரி போன்ற ஏரிகளிலிருந்து மாற்றுவழிகள் எளிதாக இருந்தும் தண்ணீர் நிரப்ப முயற்சிக்காமல் அலட்சியம் செய்துள்ளோமுங்க.
ஆட்டை போடப்பட்ட குளங்கள் போக மீதமுள்ள அதிரை நீர்நிலைகளின் காட்சியும் சாட்சியும்
செடியன்குளம் - இது அதிரையின் அடையாளங்களில் ஒன்று
காட்டுக்குளம் - சி.எம்.பி லைன் பின்புறம் மிலாரிகாடு போகும் வழி, இதன் மரத்தடியில் சுண்ணாம்பு கலவாய் ஒன்றும் இயங்கி வந்தது.
கரிச்சமணி குளம் - ஏரியாக இருந்து குளமாக சுருங்கி இன்று சாக்கடை குட்டையாக ஷிஃபா மருத்துவமனை முன் தேங்கி நிற்கிறது.
வெள்ளக்குளம் - பட்டுக்கோட்டை ரோட்டில், இமாம் ஷாஃபி பள்ளி அருகில் உள்ளது.
ஆலடிக்குளம் - வண்டிப்பேட்டை முக்கம், பெண்களுக்கென சிறப்பான, மறைவான படித்துறையை கொண்டிருந்த சரித்திர மிச்சம்.
மண்ணப்பங்குளம் - அதிரையின் ஒரே (முன்னாள்) குடிநீர் குளம், பெட்ரோல் பங்க் பின்புறம், வண்டிப்பேட்டை.
புள்ளகுளம் - இது இரண்டு குளங்களின் இணைப்பு, ரெட்டை குளம் எனவும் அழைக்கப்படுகிறது, ஒரு குளத்தில் ஆண்களும் மற்றொரு குளத்தில் பெண்களும் குளித்து வருகின்றனர், சுரைக்கா கொல்லை.
ஆஸ்பத்திரிதெரு குளம் - புதுப்பள்ளி பின்புறமுள்ளது, ஒரு காலத்துல இங்கயும் தான் குளிச்சாங்க.
பஸ் ஸ்டாண்ட் குளம் - போலீஸ் ஸ்டேசன் எதிரில், பேரூராட்சி அலுவலகம் அருகில், தலைவர், துணை தலைவர், அனைத்து கவுன்சிலர்களும் தினமும் போற பாதையில ஊர் மாணத்த ஏலம் போடுற இடம்.
மாரியம்மன் கோயில் குளம் - கரையூர் தெரு கோயில் அருகில்.
கினியாங்குளம் - தரகர் தெரு, முறையான கரையோ, துறையோ, வழியோ இல்லாத வித்தியாசமான, சுத்தமான குளம், குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் கொல்லைபுறங்களே இக்குளத்துக்கு செல்லும் வழி என்பதால் வீடுகள் நடுவே அமைந்துள்ள ஓர் தண்ணீர் தீவு எனவும் சொல்லலாம்.
சேனாங்குளம் - கினியாங்குளத்தோடு ஒட்டி உறவாடும் அசுத்தநீர் தேக்கம், கடற்கரை தெரு தர்கா பின்புறமுள்ளது.
வெட்டிக்குளம் - இன்னும் பயன்பாட்டில் உள்ள கடற்கரை தெரு குளம்.
சமரங்குளம் - புதுத்தெரு, மிஸ்கீன் பள்ளி முன்புறமுள்ளது, கொஞ்சம் கொஞ்சமா மூடிக்கிட்டே வர்றாங்க (வலிக்காம அடிக்கிறாங்களாம்).
புதுக்குளம் - மேலத்தெரு, பேர்ல மட்டும் தாங்க புதுசு, மாடு கழுவ கூட லாயக்கில்லீங்க.
செக்கடிகுளம் - நடுத்தெரு, ஊர் மத்தியின் கம்பீரம்.
பெத்தாங்குளம் - மேலத்தெருவிலிருந்து மகிழங்கோட்டை செல்லும் வழியில், ஆளில்லா ரயில்வே கிராஸிங் கீழே.
அதிரையை பற்றி யாராவது ஆன்லைன் மியூசியம் திறப்பதாக இருந்ததால் தாராளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ளலாமுங்க.
அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 2
கரிச்சமணியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கினா, 100 மீட்டர் தூரத்துல ஆலடி குளத்தையும் நிரப்பலாம். உபரி நீரை 50 மீட்டர் தூரத்துல உள்ள CMP வாய்க்காலிலும் விடலாம். செல்லிக்குறிச்சி ஏரியும் பிளாட் ஆகுமுன்பாக ஆழப்படுத்தப்பட வேண்டும் இதனால் வருட முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதுடன் விவசாயமும் நிலத்தடி நீரும் கணிசமா உயருமுங்க.
செல்லிக்குறிச்சி ஏரி நீர் மூலமும் மழைநீர் மூலமும் நிரப்பப்படும் மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரியும் நம்ம ஊரு ஏரி தாங்க, பேருதாங்க மழவேனிற்காடு ஆனா இருப்பது வண்டிப்பேட்டை பக்கத்துலங்க.
ஒரு காலத்தில் கடல் ஜாவியா வரை இருந்தது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை, இக்கூற்று உண்மை என்றால் அதிரையில் மறைந்து வரும் (மறைந்து விட்ட) நீர் ஆதாரங்களில் சேர்க்கத் தகுதியானதே என்றாலும் ஜாவியா வரை கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் கழிமுகம் (வாய்க்கால்) முன்பு இருந்திருக்கக்கூடும் இதையே கடல் ஜாவியா வரை இருந்ததாக சிலர் நம்ப காரணமாக இருக்கலாம்.
ஜாவியாவிற்கு பின்புறம் செய்னாங்குளம் செல்லும் இறக்கத்தில் (தோணி) வத்தை கட்டும் தொழில் பல்லாண்டுகள் இயங்கி வந்தது என் கருத்திற்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன், கடலுக்குச் செல்லும் கழிமுக வாய்க்கால் அருகே இருந்ததனால் தான் இத்தொழிற்கூடம் இங்கே இயங்கி இருக்கலாம்.
இப்பவும் இருக்கிற காலேஜ் வாய்க்காலுக்கும் ஜாவியாவுக்கு எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் வாய்க்காலும் போச்சு! வத்தை கட்டும் தொழிலும் போச்சு!!
நீர்நிலை குறித்த ஆக்கம் என்பதால் நமதூர் கடல் காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
நமதூரை சுற்றியுள்ள ஏரிகளால் பயன்கள் ஏராளம் ஆனா பயன்படுத்தத் தெரியாத ஏமாளிங்க நாமங்கிறது தான் ஒட்டு மொத்த உண்மைங்க என ஈனஸ்வரத்தில் முனகி என் ஆதங்கத்தை முடிக்கிறேங்க.
தொகுப்பு : அதிரைஅமீன்
படங்கள் : ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இனியாவது சிந்த்திக்கட்டும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அருமை.
ReplyDeleteசிறந்த ஆய்வு.
இதனைக் குளங்களா !
குளங்களும் காணாமல் போய்கிறதா ?
உறங்குகிறோம்.
விழித்துக்கொள்ள நேரம் இன்னுமா இல்லை ?
களம் இறங்கும் அரசியல் இதிலும் காட்டலாமே !
சேவை சேவை என்று அழைவோரும் இதனை கையில் எடுத்தால் கோடி நன்மை.
அருமையான ஒரு ஆய்வு உரிய நேரத்தில் தரப்பட்டுள்ளது நாங்கள் குளித்து மகிழ்ந்து நிராடிய குளங்களின் நிலைகளை காணும்போது கண்கள் குளமாகின்றன. நன்றி அமீன்.
ReplyDeleteபழமையை மீண்டும் கண்முன்கொண்டுவந்த அதிரை நியூஸ்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் இனியாவது மக்கள் சிந்திக்கட்டும்.
ReplyDelete