.

Pages

Thursday, December 19, 2013

அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர் நிரப்ப களத்தில் இறங்கிய அதிமுகவினர் !

அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவதற்காக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்று. 

அதிரை நகர அதிமுகவினரும் தமது பங்குக்கு களத்தில் இறங்கி பணி ஆற்றிவருகின்றனர். அதிரையின் குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் முயற்சியாக நமது மாவட்ட அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டும் வருகின்றனர்.

அதிரை அதிமுக நகர நிர்வாகிகள் பிச்சை, தமீம் அன்சாரி, ஹாஜா பகுருதீன் கம்யூனிஸ்ட் நகர நிர்வாகி காளிதாஸ் ஆகியோரின் மேற்பார்வையில் அதிரைக்கு தண்ணீர் வரும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அதிமுக உறுப்பினர்கள் சரிசெய்யும் காட்சிகள்...

நன்றி : அதிரை போஸ்ட்
















8 comments:

  1. சரியான போட்டி !
    இதை இதைத்தான் எதிர்ப் பார்க்கிறோம்.
    சேவையில் நீயா நானா ?
    இந்தப் போட்டி தொடர்ந்தால்....தொடரத்தான் வேண்டும்....ஊர் செழிப்படையும்.
    சபாஷ் !

    ReplyDelete
  2. நாட்டாமை தமீம் சாச்சா கச்சலை கட்டுனாதான் வேலை நடக்குது.
    தண்ணிரை கண்ணில் காட்டிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. ஆளும் கட்சியனரும் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டிற்குரிய விஷயம். முயற்சி வெற்றி பெற்று மக்கள் பயனடைய பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    கடந்த ஒரு சில நாட்களாக அதிரையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பணியில் ஒரு சிலருடைய முயற்சியால் பணிகள் நடை பெற்று வருகின்றன, இதற்கிடையில் ஆளும் கட்சியனரும் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டிற்குரிய விஷயம். முயற்சி வெற்றி பெற்று மக்கள் பயனடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், என்றும் உங்களுக்காக துஆ உடன் ... ஆமீன்.

    ReplyDelete
  5. போட்டிகள் நல்ல விஷயத்திற்காக இருந்தால் அதிரையர் கொடுத்து வைத்தவர்கள்தான் நிற்க போட்டோ மொத்தம் 16 எண்ணிக்கை அதுபோல் குளங்களை நிறப்பும் எண்ணிக்கையும் இருக்கட்டும்

    ReplyDelete
  6. அய்யா... இவ்வளவு நாட்களா எங்கய்யா இருந்திங்க.
    வாய்கால் ஏற்கனவே தூர்வாரி தானய்யா இருக்கு, தூர் வாரின வாய்க்கால் என்னத்தைய்யா தேடுறிங்க..
    அடைப்பு எடுக்குறோம் அப்டின்னு சொல்லி வாய்க்கால் ல ஓட்டைய போட்டுடாதிங்க..
    தூர் வாரின வாய்க்கால் ல (முத்து ஏதும் தேடுறாங்களோ என்னவோ)!!

    ReplyDelete
  7. இரவில் வேலை செய்வதை பார்த்தால் கணாமல் போன பொருளை தோடுவதுபோல் உள்ளது நல்ல படம் காட்டுறியே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.