.

Pages

Sunday, July 20, 2014

பள்ளிக்கு டூவீலரில் மாணவர்கள் வந்தால் தலைமை ஆசிரியரே பொறுப்பு !

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவு: 
அனைத்து  பள்ளிகளிலும் பல்வேறு மாணவ மாணவியர் 16 முதல் 18 வயதுடையோர் முறையான ஓட்டுநர் உரிமம் பெற இயலாத நிலையில் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வருவதால் பல்வேறு விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அனைத்து பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவ மாணவியர்  பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வரக்கூடாது என திட்டவட்டமாக  தெரிவித்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  உத்தரவிடப்படுகிறது.

அவ்வாறு மாணவ மாணவியர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் அவர்களின் வாகன சாவியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின்  பெற்றோரை அழைத்து உரிய அறிவுரைக்கு பின்னர் வாகனத்தை நேரில்  ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக  தலைமை ஆசிரியர்களுக்கு  அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படின் பள்ளி  தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும்  தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. சட்டம் கடுமையாக்கப்பட்டால், ஒழுக்கம் வந்துவிடும். இறப்புகள் தவிர்க்கப்படும்.

    ReplyDelete
  2. தலைமை ஆசிரியர் பொறுப்பு என்பது ஒருவகையில் சரிதான்.

    அதே நேரம் போக்குவரத்துப் பிரிவு என்று காவல் துறையில் ஒரு பிரிவு இருக்கிறதே அது எதற்காக ?

    ஓட்டுனர் உரிமம் பெறாதவர்களை தடுத்து நிறுத்தி தண்டனைக்கு ஆளாக்குவது அவர்களுக்குக் கடமை இல்லையா?

    ஏற்கனவே மாணவர் ஆசிரியர் உறவுகள் சீர் கெட்டுக் கிடக்கின்றன. கண்டிப்புடன் நடக்கும் ஆசிரியர்களை கத்தியைக் காட்டி மிரட்டும் நிலைக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள்.

    ஆகவே காவல் துறையும் இதில் தீவிரமான பொறுப்பு எடுக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.