.

Pages

Tuesday, July 29, 2014

திடல் தொழுகைக்கு திரண்டுவந்த அதிரை மக்கள் !

பெருநாளை முன்னிட்டு அதிரையில் இன்று காலை அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன.

அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுவதும் நெருக்கடியாக காணப்பட்டது. அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் வாகன நெருக்கடியை சரிசெய்தனர். தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் குடிநீர் பாக்கெட், பேரித்தம் பழங்கள் வழங்கப்பட்டது.







1 comment:

  1. இன்று நடைபெற்ற பெருநாள் தொழுகையில் சகோ.அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் கொள்கையற்றவர்களின் தடுமாற்றங்கள் பற்றியும் மிக தெளிவாக விளக்கினார்

    "கொள்கையில் உறுதியாக நிலைக்க செய்த
    அல்லாஹுக்கே எல்லா புகழும்"
    என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

    பெருநாள் திடல் வசூல் ரூபாய் = 41,800/-

    (பித்ரா வசூல் ரூபாய் = 1,42,650/-
    இதில் 450 குடும்பங்கள் பயன் அடைந்தனர்
    அல்ஹம்துலில்லாஹ்...

    செய்தி வெளியிட்ட அதிரை நியூஸ் இணையதளத்திற்கு நன்றி....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.