இதில் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா தலைமை வகிக்க, அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்ட மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி, மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் கண்டன உரையாற்ற்றினார்கள்.
முன்னதாக நமதூர் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பேரணி புறப்பட்டு கடைதெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்த தமுமுக மமக நிர்வாகிகள் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் கண்டன கோசங்கள் எழுப்பினர். இதில் தமுமுக - மமகவின் முக்கிய நிர்வாகிகள் கோசங்கள் எழுப்ப கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் வழிமொழிந்து கோசங்கள் எழுப்பினர். இதில் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் மீது ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் இசுரேல் ராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பட்டது.
கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆகிய கதை இதுதான் மாநில பொதுச்செயலாளர் கலந்துக்கொள்ளும் ஆர்பாட்டத்தில் 20 நபர்கள் கலந்துக்கொண்டால் அடுத்த முறை உங்களுக்கு 1 எம் எல் ஏ சீட்டு பெருவது கடினம்
ReplyDeleteபெயருக்காக கண்டன ஆர்பாட்டம் நடத்தக்கூடாது , இஸ்ரேல் தூதரக முன்பாக நடத்திருந்தால் சரி எனலாம்
ReplyDeleteஅதிரையில் நடத்துவது செவிடன் காதில் சங்கு ஊதியது போலதான். இனி பேனரில் இங்கிலீஷ் வார்த்தை அடங்கியதாக இருந்தால் டெல்லி வாசிகள் படிக்க ஏதுவாக இருக்கும்!
இஸ்ரேல் அட்டகாசத்தை ஒடுக்க ஈரானால் மட்டும் தான் முடியும் - காலம் எப்போ வருமோ!