.

Pages

Tuesday, July 29, 2014

சவூதி ஜித்தாவில் அய்டா நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி !

ஜித்தா ஷரபியா மற்றும் அய்டா நண்பர்களின் சார்பில் பெருநாள் சந்திப்பு ( ஈத் மிலன் ) ஜித்தா லக்கி தர்பாரில் சிறப்பாக நடைபெற்றது.

அய்டா தலைவர் ராஃபியா அவர்கள் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். அய்டா முன்னாள் நிர்வாகி அஜ்வா நெய்னா மற்றும் பசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை தலைவர் சர்புதீன் மற்றும் மெப்கோ நிர்வாகி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக துணை தலைவர் ஜபருல்லா வரவேற்புரையாற்றி நோன்பு பெருநாள் சிறப்பு குறித்து விளக்கி கூறினார்.

தமாம், அப்ஹா, மதீனா ஆகிய பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கிராத் ஓதிய சிறுவர் சிறுமிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

இறுதியில் அய்டா நிர்வாகி அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.

செய்தி தொகுப்பு : 
அஜ்வா நெய்னா ( அய்டா முன்னாள் நிர்வாகி )



1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஈத் முபாரக் ‎

    இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், ‎உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் ‎மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.