.

Pages

Monday, July 21, 2014

குற்றாலம் ஜாமிஆ மஸ்ஜீதில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் இஸ்லாமிய பயணிகளுக்காக புதுபொலிவுடன் காட்சிதரும் குற்றாலம் ஜாமிஆ பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இஃப்தாரின்போது வழங்கப்படுகிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வருகின்றனர். இரவில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் இஸ்லாமிய பயணிகள் தொழுகையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் சஹர் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

புனித ரமலான் மாத நோன்பு தொடர்பான செலவீனங்களுக்கும். ஆண்டு முழுவதும் நடைபெற இருக்கும் பள்ளியின்  பராமரிப்பு செலவீனங்களுக்காகவும் நம்மிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர் குற்றாலம் ஜாமிஆ மஸ்ஜிதின் நிர்வாகிகள் மற்றும் இமாம்... 

நிர்வாக தொடர்பு மற்றும் வங்கி கணக்கின் விவரங்கள் : 










3 comments:

  1. Thank u for published News in adirai.hajiar hotel courtallam.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஸஹர் ரமழான் முபாரக்.‎

    VERY GOOD.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. சுற்றுலாப் பகுதிகளில் மிகவும் இன்றியமையாத பகுதி குற்றாலம், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு பெரும்பாலான மக்கள் சென்று வருகின்றனர்,.

    அதில் குறிப்பிடத்தக்க வகையில் நமதூர் மக்களும் அடங்குவர். இதில் பெரிய விஷயம் இதுபோன்ற சுற்றுலா பகுதிகளில் வேளைக்கு தொழுகையை நிறைவேற்றும் விதமாக பள்ளிவாசல்கள் அமைவதாகும். அதில் இந்த ஜாமியா மஸ்ஜித் குறிப்பிடத்தக்கது.

    இதை நிர்வகித்ததில் அதிரையர்களுக்கும் மிக பங்குண்டு என்ற தகவலும் உண்டு, வருடத்திற்கு நான்கு மாதங்கள் மட்டுமே வருமானம் உள்ள இந்த பள்ளிக்கு ஆண்டு முழுவதும் உள்ள செலவினங்களுக்கு பெரும் தொகை தேவைபடும் அந்த வகையில் இப்பள்ளிக்கு இந்த சிறப்பான மாதத்தில் உதவி புரிவது மேலும் நன்மையை தரும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.