.

Pages

Monday, July 28, 2014

அதிரையில் எஸ்டிபிஐ நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் பங்கேற்பு !

அதிரையில் எஸ்டிபிஐ சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி இன்று 28-07-2014 மாலை மேலத்தெருவில் உள்ள சம்சுல் ரஹ்மான் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் தலைமை வகிக்க, எஸ்டிபிஐ நகர தலைவர் U. அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு ஊரிப்பினர் அபூபகர் சித்திக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தாஜூல் இஸ்லாம் சங்க தலைவர் M.M.S. சேக் நசுருதீன், TIYA அமீரக தலைவர் அப்துல் மாலிக், செயலாளர் நூர் முஹம்மது ( நூவன்னா ), எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மஹரிப் தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 






1 comment:

  1. பதிவுக்கு நன்றி மற்றும் பெருநாள் வாழ்த்துக்கள்...............

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.