.

Pages

Wednesday, July 30, 2014

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளை நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி சிறப்புரை !

இன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சிஎம்பி  லேனில் அமைந்துள்ள ஏ எல் மெட்ரிக் பள்ளியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பில் பெருநாள் சந்திப்பு மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் தலைமையேற்று, நிகழ்சிகள் அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னிலை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 'இஸ்லாமியப் பொருளாதாரம்' மற்றும் வட்டியின் கொடுமை குறித்து அழகாக விளக்கி கூறினார்.

கடந்த அன்று [ 08-06-2014 ] அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில்  நடைபெற்ற ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தலைவர் A. அப்துல் ரஹீம், துணைத் தலைவர் S. அஹமது அஸ்லம், செயலாளர் A. சேக் அலி, துணைச் செயலாளர் M.U. கமாலுதீன், பொருளாளர் S.H. அப்துல் காதர் ஆகியோர் இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் A. அப்துல் ரஹீம் நன்றியுரை கூறினார்

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் அலி அக்பர், ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் ஒத்துழைப்புடன் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள், அதிரையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









1 comment:

  1. எனது அன்பிற்குரிய காக்கா இப்ராஹிம் அன்சாரி அவர்கள் ஒரு சிறந்த சமூக விளிப்புனர்வுவாதி அவர்களின் இந்த பங்கேற்ப்பு தாள சிறந்தது. கர்ழன் ஹஸனா இதில் பயனடையும் பயனாளிகள் வாங்கும் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தினால் அந்த அமைப்பு மேலும் வலுப்பெறும் ....

    அல்ஹம்துலில்லாஹ் ...அதிரையர்களின் தர்ம சிந்தனை உலகெங்கும் பரவட்டும் ....

    'கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை'
    என்ற தமிழ் மொழிக்கு முற்றுபுள்ளி வைப்போம் ..வாங்கிய கடன்களை உரிய காலத்தில் கொடுக்க முற்படுவோம் ...ஆமீன் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.