பெரிய ஜும்மாப் பள்ளி, மரைக்கா பள்ளி, செக்கடிப் பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி, புதுப்பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, தரகர் தெரு [ ஆஷாத் நகர் ] ஜும்மாப்பள்ளி, மேலத்தெரு அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளி, AJ பள்ளி ஆகிய பள்ளிகளில் காலை 8 மணிக்கும், பிலால் நகர் மற்றும் அல் அமீன் பள்ளியில் காலை 8.30 மணிக்கும், தக்வா பள்ளியில் காலை 9.00 மணிக்கும் பெருநாள் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொழுகைக்கு முன்னர் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் பெருநாள் காலை சரியாக 7.30 மணிக்கு நடைபெறும் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் மேலத்தெரு சானவயலில் காலை சரியாக 7.30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும் மின்னொளியில் களைகட்டி காணப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக ஜவுளிக்கடைகள், தொப்பிக்கடைகள், இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் சுவிட் கடைகள் ஆகியவற்றில் வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன. சலூன் கடைகளில் சிறுவர் - பெரியவர் - இளைஞர் கூட்டம் அலைமோதுகின்றன. புதிதாக தைய்க்க கொடுத்துள்ள உடைகளை வாங்குவதற்காக டைலர் கடைகளில் கூட்டங்கள் கூடுதலாக காணப்பட்டது. மஸ்ஜீதுகளில் தக்பீர் ஒலிகள் ஓங்கி ஒலித்துக்கொண்டுருக்கின்றன
நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன. அதிரை மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஈத் முபாரக்
இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
எந்த நாட்டில் வசித்தாலும் சொந்த ஊரில் இருந்து பெருநாள் கொண்டாடுவதில் தனி சந்தோஷம்தான்.
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
பெருநாள் நாட்களில் ஒரு காலத்தில் கடைத்தெரு என்றாலே ஞாபகம் வருவதெல்லாம் அன்சாரி கேப் மார்ட் ,இலியாஸ் கேப் மார்ட் ,பரகத் ஸ்டோர் ஒரு கைலி எடுக்க பத்து கைலிகளை வீட்டில் கொண்டுபோய் உம்மாவிடம் காண்பித்து அதில் ஒன்றை செலக்ட் செய்வது ,இரவு 11 மணிவரை பெட்ரோ மாஸ் லைடில்ஒரே இடத்தில் கூடிய இறைச்சி கடைகள் மேலும் ஒருமாதம் முன்கூட்டியே தைக்கப்படும் தையல் துணிகள் விடிய விடிய துணிகளை தைக்கும் நமதூர் டைலார்கள்.இரவு நேர டீ மற்றும் பால் கடைகளே .
ReplyDelete