.

Pages

Thursday, July 31, 2014

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
             
காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு மக்களவையில் வியாழன் அன்று ஒரு மசோதாவை தாக்கல் செய்வதாக அறிவித்தது. பின்னர் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட அமளியால் மக்களவை ஓத்தி வைக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த முயற்சியை கண்டித்து நாடு முழுவதும் காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
           
பட்டுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகத்தில் வியாழன் அன்று மதியம் உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளை தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சம்பத், இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பக்கிரிசாமி நன்றி கூறினார். சங்கீதா, எல்ஐசி முகவர் திருமேனி, மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூறு பேர் கலந்து கொண்டு முழக்கமெழுப்பினர்.

செய்தி : 
எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.