இது குறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறுகையில்...
'அதிரையை சுற்றி காணப்படும் கடல் பகுதியிலிருந்து ஏலத்திற்காக இங்கு கொண்டுவரப்படும் கொடுவா மீன்களை வெளியூர்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் உள்ளூர் வியாபாரம் பாதிப்படைகிறது. புனித ரமலான் மாதத்தில் சஹர் உணவுக்காக கொடுவா மீன்னை விரும்பி சாப்பிடும் உள்ளூர் மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு நேரடியாக துறைமுகத்திற்கு சென்று பிரத்தியகமாக கொடுவா மீன்களை விற்பனைக்காக வாங்கி வந்துள்ளோம். இந்த மீன்களை உள்ளூர் மக்களுக்கு மாத்திரம் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் கொடுவா மீன்களை உள்ளூர் மக்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்' என்றார்.
அடடா, கொடுவா மீனுலோ, எப்படி செய்தாலும் சுவையே தனிலோ, எப்படியும் ஆயிரத்துக்கு மேல்தான் இந்த மீன்களெல்லாம் விக்குது, காசு உள்ளவுக வாங்கி சாப்பிடுராகுக, காசு இல்லாதவக கனவில்கூட பார்க்க முடியாம வாடுருராகுக..
ReplyDeleteஎனக்கெல்லாம் வெளிநாட்டிலுருந்து காசு பணம் வந்தால் நானும் வாங்கி சாப்பிடுவேன், இல்லாட்டி காரப்பொடி, கத்தாலம்பொடி, சூரப்பொடி இதைத்தான் வாங்கி சாப்பிடமுடியும், அதுகளும் லேசான விலையா விக்குது? அம்மாடியோவ், நெருப்பு விலை.
எனக்கு பொறந்தது எல்லாம் பொட்டப்புள்ளே, கஷ்டப்பட்டு உழைத்து சிட்டுக்குருவி மாதிரி சேர்த்துவைத்த பணத்திலே மணக்கட்டு வாங்கி வீடு கட்டி பொம்பள புள்ளைகளுக்கு கொடுத்துட்டேன், மருமகன் கால் மேல் கால்போட்டு மரியாதை இல்லாமல் இருக்கின்றான். என்னை காட்டுப்பள்ளியில் போய் படுக்கச் சொல்றான்.
எனக்கு ஒரு மகன் பிறந்து இருந்தால், அவனுக்கு பாசுபோட்டு எடுத்து, லண்டனுக்கு அனுப்பி, அவன் அனுப்புற காசுலே நாளைய தினத்தை யோசிக்காமே கண்ணை மூடிக்கொண்டு சொல்ற விலையை கொடுத்து இந்த மாதிரி கொடுவா மீனை வாங்கி சாப்பிடுவேனே.
மகனா, இனி எங்கே பிறக்க போறான்.
All is well
Deleteஇங்கு துபாய்ல இப்போ மீனு வரத்து ரொம்ப குறைஞ்சி போச்சி நல்ல மீனுக வரமாட்டேங்குது. அதனால சஹுருக்கு தினமும் சாம்பாரும் கோழிப் பொரியலுமாத்தான் போவுது . இந்த மாதிரி மீனு இங்கே கெடச்சா தங்கமாக்கும்.
ReplyDeleteகொடுவாமீனு அநேகம் விலை இறைச்சியை விட கூடுதலாகவே இருக்கும் என நினைகின்றேன் ....சிம்பிள் சமையல் பச்சை மிளகாய்.கருவேப்பிலை ,தக்காளி ,புளி அப்படியே போதுமான மசாலா தூள் ரெண்டு கொதியிலே வெந்துடும் ...முக்கியம் சோறு சுட சுட இருக்கணும் கூடவே முருங்கை கீரை கூட்டு வதக்கியது ......ம்ம்ம் அந்தமாதிரி இருக்கும் .
ReplyDeleteஅதிரை போஸ்ட் மென் அவர்களுக்கு ....புரிகிறது உங்களின் ஆதங்கம் அல்லாஹ் உங்களின் கஷ்ட்டங்களை நீங்கிட நோன்புடன் துஆ செய்கின்றேன் .
ReplyDelete//எனக்கு பொறந்தது எல்லாம் பொட்டப்புள்ளே, கஷ்டப்பட்டு உழைத்து சிட்டுக்குருவி மாதிரி சேர்த்துவைத்த பணத்திலே மணக்கட்டு வாங்கி வீடு கட்டி பொம்பள புள்ளைகளுக்கு கொடுத்துட்டேன், மருமகன் கால் மேல் கால்போட்டு மரியாதை இல்லாமல் இருக்கின்றான். என்னை காட்டுப்பள்ளியில் போய் படுக்கச் சொல்றான்.//
அநேகம் மருமகன் தவ்ஹீது வாதியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது உங்களையும் காட்டுப்பள்ளி தர்காவில் போய் படுக்க சொல்லி இருக்க மாட்டார் என்றே நினைகின்றேன் .....அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கட்டும் .அமீன் .