.

Pages

Saturday, August 29, 2015

நாசா எச்சரிக்கை: 3 அடிகள் வரை உயரும் கடல் மட்டம்


புவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த  2013-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது.  அதில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து  மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மேலும் 3 அடிகள் வரை கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக மாறும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளோ இனி இதை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் காலதாமதமானது, அதற்கான  காலத்தை நாம் எப்போதோ கடந்து விட்டோம் என்று ஆதங்கமடைகின்றனர்.

நன்றி மாலை மலர்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.