.

Pages

Friday, August 28, 2015

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 9வது சுற்று செப்டம்பர் 1-இல் துவக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோமாரிநோய் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணைஎன்றும் அழைக்கப்படும். இந்தநோய் நம் நாட்டில் கலப்பினமாடுகளைஅதிகம் தாக்கிகால்நடைவளர்ப்போருக்குபொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பைஏற்படுத்துகிறது. பொதுவாக இந்தநோய் குளம்புகள் கொண்டகால்நடை இனங்களைஅதிகம் தாக்குகின்றன. இந்தநோயினால் கறவைமாடுகளில் பால் உற்பத்திகுறைகிறது. சினைப்பிடிப்பதுதடைபடுகிறது. எருதுகளில் வேலைசெய்யும் திறன் குறைகிறது. இளங்கன்றுகளில் இறப்புஏற்படுகிறது.

இந்நோய் நச்சுயிரியால் (வைரஸ்) ஏற்படுகிறது.இந்தநோய் குளிர் மற்றும் பனிக்காலம்,நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்றகால் நடைவளர்ப்பு,நோய் பாதித்தகால் நடைகளைபிரித்துபராமரிக்காமல் இருத்தல் மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடாதிருத்தல் ஆகியகாரணங்களால் இந்நோய் பரவுகிறது.இந்தநோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்றமாடுகளுக்கு நேரடியாகதொற்றும் தன்மைகொண்டது. இந்நோய் விரைவாககாற்றின் மூலம் 60 கிமீபரவும் தன்மைகொண்டது.

இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், வாயிலிருந்து நுரைகலந்த உமிழ்நீர் நூல் போலஒழுகுதல்,வாயின் உட்பகுதி,நாக்குமற்றும் கால்நடை குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றியபின் உடைந்துரணமாகமாறும். அசைபோடும் போதுமாடுசப்புகொட்டுவதுபோல் சப்தம் உண்டாகும். பாதிக்கப்பட்டபசுக்களின் கன்றுகளுக்குபால் குடிக்கவிடக்கூடாது. அவ்வாறுகுடித்தால் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். இந்தநோய் கண்டகால்நடைகளைதனியாகவேறு இடத்தில் வைத்துதீவிரசிகிச்சைஅளிக்கவேண்டும். இந்தநோய் வராமல் தடுப்பதற்குகால்நடைகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை கால்நடைதுறையினரால் தடுப்பூசிபோடப்பட்டுவருகிறது.
இந்நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பினை கருத்தில் கொண்டுதேசியகால் மற்றும் வாய் நோய் (கோமாரிநோய்) தடுப்பூசித்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரைதமிழ்நாட்டில் 8 சுற்றுகள் கோமாரிநோய் தடுப்பூசிப் பணி ஒவ்வொருமார்ச் மாதம் 1-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரையிலும், ஒவ்வொரு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரையிலானகாலங்களில் கோமாரி நோய் தடுப்பூசிமுகாம்கள்செம்மையாகசெயல்படுத்தப்பட்டுவருகிறது.

தற்பொழுது கோமாரிநோய் தடுப்பூசிமுகாம் 9வது சுற்றுசெப்டம்பர் மாதம் 1-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரைதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 87 ஆயிரம் எண்ணிக்கையிலான பசு மாடு மற்றும் எருமைமாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 77 தடுப்பூசி பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் குளிர் நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் இக்குழுவினரால் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 100மூதடுப்பூசி பணி மேற்கொள்ளும்பொருட்டும்,விவசாயிகளுக்குவிழிப்புணர்வுஏற்படுத்தும் வகையிலும் அனைத்து கிராமங்களிலும் சிறப்புகிராம சபை கூட்டம் (29.08.2015) ஆகஸ்ட் 29-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறஉள்ளது. இதில் அனைத்துவிவசாயிகளும் பங்கேற்று கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளின்படிகால்நடைகளைஅந்தந்தகிராமங்களில் தடுப்பூசி போடப்படும் நாட்களில் அழைத்துச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.