.

Pages

Tuesday, August 25, 2015

அதிரை தமுமுக செயற்குழு கூட்டத்தில் மருத்துவர் அணி-மாணவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம் !

அதிரை பேரூர் தமுமுக செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஏ.ஆர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா, நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, கமாலுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமுமுக அதிரை நகர மாணவர் அணி - மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யபப்ட்டனர். இதில் அசாருதீன் மருத்துவ அணி செயலாளராகவும், நூர் முஹம்மது மாணவர் அணி செயலாளராகவும் ஏகமனதாக நியமனம் செய்யப்பட்டனர். நியமனம் செய்யப்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு தமுமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கூட்டு குர்பானி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டன. தமுமுக அதிரை பேரூர் சார்பில் வழக்கம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்து என முடிவு செய்யப்பட்டது. இதற்காக நல்ல திடகாத்திரமான ஒட்டங்கள், மாடுகள் தகுதியுள்ள நபர்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்வது என்றும், ஒட்டகத்தின் ஒரு பங்கின் விலை ரூபாய் 12,000/- எனவும், மாட்டின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1400/- எனவும் நிர்ணயம் செய்து பங்குகள் பொதுமக்களிடமிருந்து பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் குர்பானித்தோல் வசூல் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் கிடைக்கும் தொகைகள் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக முடிவு செய்யப்பட்டன.

கூட்ட முடிவில் நகர தமுமுக பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி நன்றி கூறினார். கூட்டத்தில் தமுமுகவினர் கலந்துகொண்டனர்.
 
மருத்துவ அணி செயலாளர் அசாருதீன்
 மாணவர் அணி செயலாளர் நூர் முஹம்மது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.