.

Pages

Saturday, August 15, 2015

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா இன்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின பேருரை நிகழ்த்தினார்.

'ப்ளாஸ்டிக் இல்லா' பேரூராட்சியாக மாற்றிட அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உறுதி மொழியை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாசிக்க விழாவில் கலந்துகொண்ட அனைவரும் வழிமொழிந்தனர். இதைதொடர்ந்து பேரூராட்சி தலைவர் அஸ்லம் சார்பில் மஹல்லா நிர்வாகிகள், பஞ்சயாத் தலைவர்கள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

விழாவில் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி. வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், அனைத்து மஹல்லாவை சேர்ந்த முக்கியஸ்தர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
 
 

2 comments:

  1. 69வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பெற்ற சுதந்திரத்தினை பேணிகாத்து,இந்தியன் என்ற ஓர்மொழியாக அனைவரும் இணைவோம் சுதந்திர தின விழாவில்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.