.

Pages

Friday, August 21, 2015

மல்லிபட்டினம் மனோரா ஈசிஆர் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

மல்லிப்பட்டினம் மனோரா ஈசிஆர் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கோபாலபட்டினத்திலிருந்து ஈசிஆர் சாலையில் நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார் மல்லிபட்டினம் மனோரா அருகே வந்த போது அதே சாலையில் சிதம்பரத்திலிருந்து வந்த மற்றொரு கார் எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு கார் சாலையோர குட்டையில் கவிழ்ந்தது. மற்றொரு கார் எதிரே வந்த பைக் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பைக்கில் வந்த 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயங்கள் ஏற்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சாலையோர குட்டை மற்றும் பள்ளத்தில் கவிழ்ந்த இரண்டு கார்களும் சேதமடைந்துள்ளன. விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நன்றி:மல்லிபட்டினம் ஆன்லைன்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.