.

Pages

Tuesday, August 25, 2015

செடியன்குளம்: மீண்டும் நினைவுறுத்துகிறோம் !

கடந்த வருடம் நிறைந்த செடியன்குளத்தின் நீரை, தொடர்ந்த பெரும் நீர் கசிவினை தடுத்து பாதுகாக்க இயலாமல் போனதால் செடியன்குளம் வெகுசீக்கிரமே வறண்டு போனதை தொடர்ந்து, குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதையை செப்பனிடக்கோரி பலராலும் கோரிக்கை வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வருட மழைக்கு முன்பிருந்தே அதே கோரிக்கைகள் மீண்டும் நினைவுறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இருநாட்கள் பெய்த மழையால் குளம் மீண்டும் ஓரளவு நிறைந்துள்ளது. மழையை பொழிவித்த எல்லாம் வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.

குளத்தின் நீர்மட்டம் மேலும் உயரும் முன்பு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள நீர் வெளியேற்று பாதையை சரி செய்து, இந்த வருட மழை நீரை நீண்ட நாள் சேமித்திடும் நோக்குடன் பராமரிப்பு பணிகளை துவங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மீண்டும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இப்போது இல்லையேல் குளம் நிறைந்து கசியத் துவங்கினால் மீண்டும் இவ்வருடத்தில் எப்போதும் சரிசெய்திட முடியாது என்ற நிலையுள்ளதால் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) போன்ற தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி, பணிகள் விரைந்து முடிந்திட களமிறங்க கேட்டுக் கொள்கின்றோம்.

அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழைநீரை வீணடித்த குற்றத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், மக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்காக மழைநீரை குளத்தில் சேமித்ததற்கான நன்மைகளை இறைவனிடம் பெற்றுக் கொள்ளவும் அனைவரும் முன்வருமாறு அன்புடன் நினைவூட்டுகின்றோம்.

முக்கிய வேண்டுகோள்: 
பிலால் நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு செடியன்குள வடிகால் வாய்க்காலையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி தரவும் மறக்க வேண்டாம்.

அதிரையிலிருந்து
S. அப்துல் காதர்
படங்கள்:அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.