இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதிரை காவல் நிலையம் அருகே அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பளியில் ( எண் 2 ) கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தனது உரையில் 'பள்ளியின் தரத்தை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தவும், பள்ளியில் போதுமான கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுப்பது தமது நோக்கம்' என்றார்.
சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் திரு. ஜெயசீலன் அவர்கள் பள்ளியில் நடத்தப்படும் முதலுதவி செயல்முறை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி குறித்து பேசினார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 'பேரிடர் தயார் நிலையில் மாணவர்களின் பங்கு' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா கே இத்ரீஸ் அஹமது அவர்கள் கடற்கரையோர அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
முன்னதாக பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார். விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணைத்தலைவர் முஹம்மது தமீம், கவுன்சிலர்கள் சிவக்குமார், அப்துல் லத்திப், சேனா மூனா ஹாஜா முகைதீன், அபூதாஹிர், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன், 'நூவண்ண' நூர் முஹம்மது மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதிரை காவல் நிலையம் அருகே அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பளியில் ( எண் 2 ) கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தனது உரையில் 'பள்ளியின் தரத்தை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தவும், பள்ளியில் போதுமான கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுப்பது தமது நோக்கம்' என்றார்.
சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் திரு. ஜெயசீலன் அவர்கள் பள்ளியில் நடத்தப்படும் முதலுதவி செயல்முறை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி குறித்து பேசினார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 'பேரிடர் தயார் நிலையில் மாணவர்களின் பங்கு' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா கே இத்ரீஸ் அஹமது அவர்கள் கடற்கரையோர அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
முன்னதாக பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார். விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணைத்தலைவர் முஹம்மது தமீம், கவுன்சிலர்கள் சிவக்குமார், அப்துல் லத்திப், சேனா மூனா ஹாஜா முகைதீன், அபூதாஹிர், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன், 'நூவண்ண' நூர் முஹம்மது மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.