இந்நிலையில் அதிரையின் தன்னார்வலர்கள் இணைந்து, பொதுநலன் சார்ந்த முக்கிய கேள்விகளை முன்வைத்து, இன்டேன் கேஸ் விநியோகஸ்தர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களை, அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், அபூதாகிர், சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் மற்றும் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் அருமையான மாலைப்பொழுதில் அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.
கலந்துரையாடலில்...
1. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதுவரையில் நேரடி மானியம் பெரும் வாய்ப்பை தவறவிட்ட நமதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாடிக்கையாளர்களின் விவரங்கள் ? மானியம் பெரும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் மீண்டும் பெற தங்களின் நடவடிக்கைகள் ?
2. புதிதாக காஸ் இணைப்பு பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமா ?
3. காஸ் பதிவு செய்த சில நாட்களில் காஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதல் தொகை வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழும் புகார் உள்ளிட்டவை குறித்து...
அதிரை சேர்மன் எழுப்பிய கேள்விகளுக்கு, திரு.பாலு அவர்கள் நமக்களித்த பதில் இதோ....
நமதூர் இன்டேன் கேஸ்சின் ஒரு பகுதி கிளை கொள்ளுக்கட்டில் இயங்குவதாக சகோ .ஜமால் முகமது அவர்கள் மக்கள் மத்தியில் அதிகம் எடுத்துரைத்து அவற்றை மறுபடி நமதூருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முன் கூறி வந்தார் அதுபற்றிய விளக்கம் இந்த பதிவில் கேட்டு இருக்கலாமே ???
ReplyDelete