இந்த அமைப்பில் நமதூரை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களாகிய காலஞ்சென்ற பெரிய மின்னார் மு. முகம்மது ஷரிஃப் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக கடமையாற்றியவர்கள். இவர்களில் மூத்தவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் இளையவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர்கள் இருவரும் இதுவரையில் அரசிடமிருந்து எந்தவொரு சலுகையும் பெறாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமதூரைச் சேர்ந்த தியாகிகள் காலஞ்சென்ற எஸ்.எஸ். இப்றாஹீம் மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோரும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தது நமதூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
இவர்களை போல் நமதூர் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அண்ணார்கள் அனைவரையும் கண்டறிந்து வரலாற்று ஏடுகளில் பதியப்பட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இந்த தியாகிகளை நினைவில் கொள்வோம். மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.