.

Pages

Wednesday, August 19, 2015

ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளம்: நேரடி ரிப்போர்ட் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாதி மத பேதமின்றி நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

நேற்று நள்ளிரவில் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்து ஏரி போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து நீர் நிரம்பிய குளத்தை இந்த பகுதியினர் ஆர்வத்துடன் வந்து பார்வையிடுகின்றனர். நீரின் மட்டம் இன்னும் சில அடிகள் உயர்ந்தால், குளம் நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடும் நிலையை எட்டிவிடும்.

இதுஒருபுறமிருக்க, செடியன் குளத்தின் மேட்டை சுற்றி காணப்படும் புதர்களையும், தேவையற்று வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்புவேலி ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் குளத்தின் மேட்டு பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகர் குடியிருப்பில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகைப்படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...
 
 
 
 

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ், ஒரு மழையிலேயே நிறையச் செய்த அல்லாஹ் மட்டும் புகழுக்குரியவன். தண்ணீர் நிரம்பி வருகிறது சந்தோஷம் ஆனால் சென்ற ஆண்டைப்போல் கோட்டை விடப்படாமல் பெருமளவில் கசிந்தோடும் தண்ணீரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? இனி விழிக்க நேரமில்லை. உடன் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை மட்டுமே செடியன்குள நீரை காப்பாற்றும். மேலத்தெரு, கீழத்தெரு சங்கங்கள் உடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.