.

Pages

Wednesday, August 19, 2015

எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் இல்லத்திருமண விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள் அழைப்பு !

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பில் இருந்து வருபவர் முஹம்மது இல்யாஸ். இவரது இளைய சகோதரர் முஹம்மது அபூபக்கர். இவரது திருமணம் எதிர்வரும் [23-08-2015 ] அன்று அதிரையில் நடைபெற உள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் எம். நிஜாம் முகைதீன் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த பணிக்காக கடந்த சில நாட்களாக எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில், கட்சியினர் மற்றும் இவரது குடும்பத்தினர் திருமண அழைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய எஸ்.எஸ் பழனி மாணிக்கம், வழக்கறிஞர் எஸ்.எஸ் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து திருமண அழைப்பு விடுத்துள்ளார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.