.

Pages

Saturday, August 15, 2015

'கலாம்' பெயரில் கப்பல்: 'இளம் விஞ்ஞானி' பிரைட் மீரா பேரூராட்சி அலுவலகத்தில் கெளரவிப்பு !

அதிரையை சேர்ந்தவர் பிரைட் மீரா. பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கிடைக்கும் ஓய்வான நேரத்தில் பயனுள்ள வகையில் பல அறிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக இந்திய தேசத்தின் மீது தான் கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் பல்வேறு நுணுக்கங்களோடு தொடர்ந்து உருவாக்கி வருகிறார். இதற்காக தனது வீட்டில் கூடுதலான நேரங்களை ஒதுக்கி ஆர்வத்துடன் செய்து வருகிறார். இவருடைய படைப்புகளை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு இவரை பாராட்டிவிட்டு செல்கின்றனர். இவரின் படைப்பாற்றலை வியந்த பலர் 'இளம் விஞ்ஞானி' என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இவருடைய அசத்தலான கண்டுபிடிப்புகளை பிறர் கண்டு மகிழ்வது இவருக்கும் கூடுதலான உற்சாகத்தை தருகின்றது. இவருடைய தயாரிப்புகளுக்கு அங்கீகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவர் உருவாக்கிய பல படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார். அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இவரது படைப்பை அங்கீகரிக்கும் வகையில் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்ட 69 வது ஆண்டு சுதந்திர தினவிழாவில் இளம் விஞ்ஞானி 'பிரைட்' மீரா கெளரவிக்கப்பட்டார். இவருக்கு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விழாவில் கலந்துகொண்ட பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மாணவ மாணவிகளின் பார்வைக்காக இவரது படைப்பு பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள இவரது பிரைட் எலெக்ட்ரிக் கடையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

இவருடைய படைப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்து இவரை ஊக்குவிக்க வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக இருக்கிறது. பிறந்த மண்ணிற்கு பெருமைத் தேடித்தந்துகொண்டிருக்கும் இளம் விஞ்ஞானி 'பிரைட்' மீராவை நாமும் வாழ்த்தி ஊக்குவிப்போம்.

1 comment:

  1. நாட்டுக்காக மக்கள் ஜனாதிபதி கலாம் செய்த படைப்புகளை, எண்ணங்களை செயல்வடிவமாக சித்தரிக்க தன் ஆற்றும் பணிக்கு வாத்துக்கள், இந்தியா, சுதந்திரம் என்ற முதல் தொலைநோக்கு திட்டத்தில் வெற்றி பெற்றது. அதே போல 'வளர்ந்த இந்தியா' என்ற 2வது தொலைநோக்கில் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என அப்துல்கலாம் சொன்னதை உறுதி ஏற்ப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.