.

Pages

Wednesday, August 19, 2015

சம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாளராக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் போட்டியின்றி தேர்வு !

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று [ 19-08-2015 ] காலை சங்க அலுவகலத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். சங்க துணை செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது, பொருளாளர் ஆடிட்டர் ஹாஜி அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் சங்க நிர்வாகத்தில் காலியாக உள்ள செயலாளர் பொறுப்புக்கு புதிய நிர்வாகி தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் மஹல்லாவாசியும், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வருமாகிய பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள், சங்கத்தின் செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தாம் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கல்லுக்கொல்லை)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.