கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் ஏனாதி பா. இராமநாதன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு, திமுக அதிரை பேரூர் செயலளார் இராம குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், பழஞ்சூர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மீராஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திமுகவின் தலைமை பிரதிநிதியும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதிரை பேரூர் திமுக வார்டு பகுதிகளில் பின்பற்றி வரும் மினிட் புத்தகம் பராமரிப்பு, திமுகவின் நிகழ்ச்சி நோட்டிஸ்கள், வாக்குச்சாவடி முகவர்கள், திமுக ஆக்கப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினார்.
முன்னதாக திமுக அதிரை பேரூர் செயலளார் இராம குணசேகரன் வரவேற்றார். கூட்ட முடிவில் திமுக அதிரை பேரூர் துணை செயலளார் அன்சர்கான் நன்றி கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, அப்துல் ஹலீம், சி.வீரப்பன், துணை செயலாளர் தில்லை நாதன், மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜி. மருதையன், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் அய்யாவு, பாஞ்சாலன், பசூல்கான், உம்மல் மர்ஜான் அன்சர்கான், என்.எம் செய்யது, என்.கே.எஸ் முஹம்மது செரிப், சித்ரா, முஹம்மது இப்ராஹீம் மற்றும் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் சபீர் அஹமது, நிஜாமுதீன், ஜே.ஜே சாகுல் ஹமீது, இப்ராஹீம், சோமு, பகவதி, முத்துராமன், சைபுதீன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Where is cherman? He is not dmk?
ReplyDelete