முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் பழமை வாய்ந்ததாகும். வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள தர்கா மற்றும் வழிப்பாட்டு தளங்கள், சுற்றுலா தளங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும். இந்த நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. பணிகள் தற்பொழுது துவங்கி நடைபெற்று வரும் நிலையில் அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பி கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும். இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடற்பாடுகள் மற்றும் வசதிகள் பெற வாய்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் சமீபத்தில் கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் முத்துப்பேட்டை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைக்க நினைக்கும் ரயில்வே துறையிடம் பேசி எண்ணத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரி மனுக் கொடுத்தனர். அதேபோல் முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் தென்னக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தும் ரயில்வே துறை எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பான எந்த அறிவிப்பும் ரயில்வே துறை அறிவிக்கவில்லை. இதனையடுத்து ரயில்வே துறையின் செயலைக் கண்டித்தும், அடுத்தக்கட்ட நிலையை அறிவிக்கவும் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மனோகரன், அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தவ்ஹீத் ஜமாஅத் முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச்செயலாளர் ராமநாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தீன்முகமது, ஒன்றிய தலைவர் நெய்னாமுகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர்அலி, நுகர்வோர் பாதுக்காப்பு அமைப்பு தலைவர் சுல்த்தான் இபுராஹிம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் செந்தில், வர்த்தகக் கழக ராஜாராம், துணைத்தலைவர் மெட்ரோ மாலில், பொதுச்செயலாளர் கண்ணன், வர்த்தக சங்க பொதுச்செயலாளர் அஜிஸ், நிர்வாகி ராஜசேகர், அரிமா சங்க மாவட்ட நிர்வாகி ஜெயபால், தமுஏச செயலாளர் செல்லத்துரை, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி சங்கம் சார்பில் ராமலிங்கம், தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், அணைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைப்பதை கைவிடாத ரயில்வே துறையை கண்டித்து முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 02- ந்தேதி முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்டில் அனைத்துக் கட்சி சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் அனைத்துக் கட்சி சார்பில் ரயில்வே போராட்டத்திற்கு அணைத்து மக்களையும் ஒன்று திரட்டும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
இந்த நிலையில் பி கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும். இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடற்பாடுகள் மற்றும் வசதிகள் பெற வாய்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் சமீபத்தில் கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் முத்துப்பேட்டை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைக்க நினைக்கும் ரயில்வே துறையிடம் பேசி எண்ணத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரி மனுக் கொடுத்தனர். அதேபோல் முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் தென்னக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தும் ரயில்வே துறை எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பான எந்த அறிவிப்பும் ரயில்வே துறை அறிவிக்கவில்லை. இதனையடுத்து ரயில்வே துறையின் செயலைக் கண்டித்தும், அடுத்தக்கட்ட நிலையை அறிவிக்கவும் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மனோகரன், அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தவ்ஹீத் ஜமாஅத் முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச்செயலாளர் ராமநாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தீன்முகமது, ஒன்றிய தலைவர் நெய்னாமுகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர்அலி, நுகர்வோர் பாதுக்காப்பு அமைப்பு தலைவர் சுல்த்தான் இபுராஹிம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் செந்தில், வர்த்தகக் கழக ராஜாராம், துணைத்தலைவர் மெட்ரோ மாலில், பொதுச்செயலாளர் கண்ணன், வர்த்தக சங்க பொதுச்செயலாளர் அஜிஸ், நிர்வாகி ராஜசேகர், அரிமா சங்க மாவட்ட நிர்வாகி ஜெயபால், தமுஏச செயலாளர் செல்லத்துரை, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி சங்கம் சார்பில் ராமலிங்கம், தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், அணைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைப்பதை கைவிடாத ரயில்வே துறையை கண்டித்து முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 02- ந்தேதி முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்டில் அனைத்துக் கட்சி சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் அனைத்துக் கட்சி சார்பில் ரயில்வே போராட்டத்திற்கு அணைத்து மக்களையும் ஒன்று திரட்டும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.