அதிரையை சேர்ந்தவர் பிரைட் மீரா. இந்திய தேசத்தின் மீது அளவில்லா பற்றுதல் காரணமாக தனது சொந்த செலவில் ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் பல்வேறு நுணுக்கங்களோடு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார்.
மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் சமீபத்திய தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார்.
இவரது படைப்பை பாராட்டி கடந்த சுதந்திர தினத்தின் போது அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து கெளரவிக்கப்பட்டார். அதிரைக்கு வருகை தந்த தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பிரைட் மீராவை பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிலையில் அதிரை அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் பெயரில் உருவாக்கிய மாதிரி கப்பல் கண்காட்சியில் இடம்பெற்று மாணவ மாணவிகளின் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நாடெங்கிலும் இன்று 67 வது குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வண்டிப்பேட்டை அருகில் உள்ள ஆலடிக்குளத்தில் இளம் விஞ்ஞானி பிரைட் மீரா உருவாக்கிய கப்பல் குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்திய தேசிய கொடியுடன் குளத்தில் வலம் வரும் கப்பலை பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகழிக்கின்றனர். குளத்தில் கப்பலோட்டிய அதிரையன் பிரைட் மீராவை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் சமீபத்திய தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார்.
இவரது படைப்பை பாராட்டி கடந்த சுதந்திர தினத்தின் போது அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து கெளரவிக்கப்பட்டார். அதிரைக்கு வருகை தந்த தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பிரைட் மீராவை பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிலையில் அதிரை அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் பெயரில் உருவாக்கிய மாதிரி கப்பல் கண்காட்சியில் இடம்பெற்று மாணவ மாணவிகளின் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நாடெங்கிலும் இன்று 67 வது குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வண்டிப்பேட்டை அருகில் உள்ள ஆலடிக்குளத்தில் இளம் விஞ்ஞானி பிரைட் மீரா உருவாக்கிய கப்பல் குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்திய தேசிய கொடியுடன் குளத்தில் வலம் வரும் கப்பலை பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகழிக்கின்றனர். குளத்தில் கப்பலோட்டிய அதிரையன் பிரைட் மீராவை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.