இந்த நிலையில் திமுக மீது இவர் காட்டி வரும் அதிக ஈடுபாட்டை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில், திமுக மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வாகை சந்திரசேகர் அவர்கள் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 25 ஆயிரமும், மகளிர் மற்றம் தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 15 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பத்தினை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் அதிரை அடுத்துள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.
அப்போது திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக பழஞ்சூர் K. செல்வம், திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Evar. Nechchayam
ReplyDeleteveatre pearuvaar.
veatre. Veatppalar.
vaalththukkal,
Annannukku
ReplyDeleteseet. Avaseyam kodukkanum
kandeppaha veatre pearuvathu
oruthe,
Vaalthukkal...
ReplyDelete