.

Pages

Thursday, January 28, 2016

பேராவூரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பழஞ்சூர் K.செல்வம் மனு தாக்கல் !

அதிரை அடுத்துள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் K. செல்வம். அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி பொதுமக்களிடையே அன்பாக பழகக்கூடியவர். மேலும் பேராவூரணி பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சையமானவர். திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களின் நீண்டகால விசுவாசி. திமுக சார்பில் நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திமுக மீது இவர் காட்டி வரும் அதிக ஈடுபாட்டை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில், திமுக மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வாகை சந்திரசேகர் அவர்கள் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

2016  சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 25 ஆயிரமும், மகளிர் மற்றம் தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூபாய் 15 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பத்தினை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் அதிரை அடுத்துள்ள பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.

அப்போது திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக பழஞ்சூர் K. செல்வம், திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

3 comments:

  1. Evar. Nechchayam
    veatre pearuvaar.
    veatre. Veatppalar.
    vaalththukkal,

    ReplyDelete
  2. Annannukku
    seet. Avaseyam kodukkanum
    kandeppaha veatre pearuvathu
    oruthe,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.