.

Pages

Monday, January 25, 2016

பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பணிகள் நிறுத்தம் தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுத்த எம்.எல்.ஏ ரெங்கராஜன் !

பட்டுக்கோட்டையில் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத இன்னல் தருவது போக்குவரத்து நெரிசல், பேருந்து நிலையம் முதல் மணிக்கூண்டு, தலையாரி தெரு, அறந்தாங்கி முக்கம், மைனர் பங்களா, மறுபக்கம் தஞ்சை சாலை, மார்க்கெட் சாலை, வடசேரி சாலை, பெரியக்கடைத்தெரு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவில் வாகன நெருக்கடியில் சிக்கி மக்கள் அவதிபடுகின்றனர்.

அதிலும் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள திரையரங்கில் புதிய படம் வரும் போதும், சாலையோரங்களில் உள்ள திருமண மண்டபங்களில் முகூர்த்த தினங்களிலும் கூட்டம் கூடி 100 ஆடி சாலையை கடந்து செல்ல மணிக்கணக்கில் ஆகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டைக்கு புறவழிச்சாலை என்பது தவிர்க்க முடியாத அவசியமாக இருப்பதால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசின் அனுமதி பெற்று அணைக்காடு முதல் வளவன்புரம் வரையிலான சாலை போட்டு அந்த சாலையும் பழைய சாலையாக போய்விட்ட நிலையில் புறவழிச்சாலை பணியை தொடரவிடாமல் வழக்கு போட்டு வழக்கு போட்டு தடைபெற்று வருகின்றனர்.

இதுபற்றி பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ ரெங்கராஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது, புறவழிச்சாலை பட்டுக்கோட்டையின் சாமானிய மக்களின் அடிப்படை தேவை. அரசியல் கடந்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய திட்டம் என்பதை உணர்ந்ததினால் தான் தமிழக முதல்வரை நான் சந்தித்து இந்த புறவழிச்சாலையினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்ட போது கட்சி பாகுபாடின்றி தமிழக முதல்வர் விரைந்து அனுமதியளித்தார்.

அதன் பிறகு நிதியமைச்சரை சந்தித்து நிதியை பெற்று டெண்டர் விடப்பட்ட நிலையில் மறுபடியும் வழக்கு தொடுத்து இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இனி என்னால் இயன்ற அளவு சட்டத்தின் மூலம் இந்த பிரச்சனையை சந்தித்து இந்த பணியை முடிக்க என்னால் ஆன அனைத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

இதுதொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன் குரல் கொடுத்து பேசியதாவது: பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அமைக்க ரூ கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது. ஆனால் தனியார் ஒருவர் வழக்கு போட்டதால் பணிகள் மந்தமாகி விட்டன. எனவே கோர்ட்டில் வழக்கை விரைந்து முடித்து புறவழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா ? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிச்சாமி, 'வழக்கை விரைந்து முடித்து பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.