.

Pages

Wednesday, January 27, 2016

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கிலிருந்து அதிரை சேர்மன் விடுவிப்பு !

அதிரை பேரூராட்சி பெருந்தலைவராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வருபவர் எஸ்.ஹெச் அஸ்லம். இவர் மீது அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பன்னீர் என்பவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடத்தி முடிக்கப்பட்ட இறுதிகட்ட விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கில் இவர் நிரபராதி எனக் கூறி இன்று விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறுகையில், உண்மைக்கு கிடைத்த வெற்றி. போலியாக போடப்பட்ட வழக்கு என்பது கோர்டில் நிருபணமாகியுள்ளது. இறைவன் உண்மையோடு என்றும் இருப்பான். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கு' என்றார்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.