ஷார்ஜா சிகாகோ கல்வி நிறுவனத்தின் சார்பில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் கல கல சிற(ரி)ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்கமாக திண்டுக்கல் ஜமால் முகைதீன் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் தங்கியிருந்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு பேராசிரியர் மன்சூர் ஒரு வழிகாட்டியாக இருந்து வந்தார். அவரது அமீரக வருகையின் மூலம் எங்களை மீண்டும் அந்த நாட்களுக்கு கொண்டு சென்றுள்ளது என்றார். திருச்சி பைசுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினர்.
முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் அவர்கள் தனது உரையில் நமது கல்லூரியில் படித்து அமீரகத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதாக வேலை தேடி வரும் இளைஞர்களுக்கும் வழிகாட்டி வருவது பாராட்டத்தக்கது. முன்னாள் மாணவர்கள் பலர் கல்லூரியில் கேட்பது போன்ற கேள்விகளை கேட்டனர். அதற்கு தனது பாணியில் பேராசிரியர் நகைச்சுவை உணர்வுடன் பதில் அளித்தார்.
எம்ஸ்டார் லாஜிஸ்டிக்ஸ் மேலாளர் பாபநாசம் ஹமீது பேராசிரியருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். மதுரை மகது மீரான் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அடியக்கமங்கலம் சிராஜ், அகமது ஹனிப், அப்துல் பாசித், ஹசன் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் அபுதாபி, துபாய், ராசல் கைமா உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், திருச்சி பைஜுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
தொடக்கமாக திண்டுக்கல் ஜமால் முகைதீன் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் தங்கியிருந்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு பேராசிரியர் மன்சூர் ஒரு வழிகாட்டியாக இருந்து வந்தார். அவரது அமீரக வருகையின் மூலம் எங்களை மீண்டும் அந்த நாட்களுக்கு கொண்டு சென்றுள்ளது என்றார். திருச்சி பைசுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினர்.
முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் அவர்கள் தனது உரையில் நமது கல்லூரியில் படித்து அமீரகத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதாக வேலை தேடி வரும் இளைஞர்களுக்கும் வழிகாட்டி வருவது பாராட்டத்தக்கது. முன்னாள் மாணவர்கள் பலர் கல்லூரியில் கேட்பது போன்ற கேள்விகளை கேட்டனர். அதற்கு தனது பாணியில் பேராசிரியர் நகைச்சுவை உணர்வுடன் பதில் அளித்தார்.
எம்ஸ்டார் லாஜிஸ்டிக்ஸ் மேலாளர் பாபநாசம் ஹமீது பேராசிரியருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். மதுரை மகது மீரான் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அடியக்கமங்கலம் சிராஜ், அகமது ஹனிப், அப்துல் பாசித், ஹசன் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் அபுதாபி, துபாய், ராசல் கைமா உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், திருச்சி பைஜுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.