இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டவாறு. 01-01-2016 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15-09-2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தின் கீழ் புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி. நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளக் கோரி வாக்காளர்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு. தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் இறுதி பட்டியல் இன்று (2,001,2016) காலை 10 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாம் வாக்களித்து வரும் வாக்குச்சாவடி மையத்திற்கு ( Booth ) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ளவும். தவறு ஏதும் இருப்பின். உரிய படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டுப் பெற்று. பூர்த்தி செய்து அளித்திடவும் வாக்காளர்கள்; கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2175 வாக்குச்சாவடிகள் உள்ளன, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (Booth Lever Officers ) 2175 பேர்; நியமிக்கப்பட்டு. அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக ( Designated Location Officers ) மொத்தம் 1113 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,
மேலும். தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி. வருகிற 31-01-2016 மற்றும் 06-02-2016 ஆகிய இரு நாட்கள் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது, இந்நிகழ்வின்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அல்லது நீக்கம் மற்றும் திருத்தம் ஏதுமிருப்பின் தொடர்புடைய வாக்கு சாவடி மையங்களில் மனுக்கள் அளிக்கலாம் என்ற விபரம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் இதன் மு்லம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்,சுப்பையன் அவர்கள் தெரித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாம் வாக்களித்து வரும் வாக்குச்சாவடி மையத்திற்கு ( Booth ) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ளவும். தவறு ஏதும் இருப்பின். உரிய படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டுப் பெற்று. பூர்த்தி செய்து அளித்திடவும் வாக்காளர்கள்; கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2175 வாக்குச்சாவடிகள் உள்ளன, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (Booth Lever Officers ) 2175 பேர்; நியமிக்கப்பட்டு. அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக ( Designated Location Officers ) மொத்தம் 1113 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,
மேலும். தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி. வருகிற 31-01-2016 மற்றும் 06-02-2016 ஆகிய இரு நாட்கள் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது, இந்நிகழ்வின்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அல்லது நீக்கம் மற்றும் திருத்தம் ஏதுமிருப்பின் தொடர்புடைய வாக்கு சாவடி மையங்களில் மனுக்கள் அளிக்கலாம் என்ற விபரம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் இதன் மு்லம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்,சுப்பையன் அவர்கள் தெரித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.