.

Pages

Thursday, January 21, 2016

பட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் முருகன் மற்றும் பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன் தலைமையில் ரோட்டரி சங்கத்தினர் பட்டுக்கோட்டை காவல்நிலையத்துடன் இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகள் ஒட்டியும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கினர்.

குறிப்பாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், சீட் பெல்ட் அணிந்து வாகனங்கள் ஓட்ட வேண்டும், பேருந்துகளில் படியில் பயணம் செல்லக்கூடாது போன்ற தகவல்கள் சொல்லப்பட்டன.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.