உலக நாடுகளே தற்போது பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது என்றால் அது “ஜிகா வைரசை” எண்ணித்தான். ஆப்பிரிக்காவின் உகண்டாவில் உருவாகி, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என உலகம் முழுதும் பரவி வருகின்றது.
டெங்கு, சிக்கன்குன்யாவை பரப்பும் ’ஏடிஸ்’(Aedes) என்ற கொசுக்களால்தான் இந்த ஜிகா வைரஸ் நோயும் பரப்பப்படுகிறது. ஜிகா காடுகளில் வாழும் குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது 1947 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே பெயர் காரணமானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் யாருக்கும் வரலாம்.
2014ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி ஜிகா வைரஸ் ஈஸ்டர் தீவு பழங்குடியினரிடமிருந்து பரவியதை சிலி நாடு கண்டறிந்தது. 2015ம் ஆண்டு மே மாதத்தில் வடகிழக்கு பகுதியிலிருந்து பரவுவதை பிரேசில் கண்டறிந்தது.
இந்த நோய் தாக்குவதால் உடனடியாக மரணம் நேர்வதில்லை என்றாலும், கவனிக்காமல் விடப்பட்டால் அதிகமாகி பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.
ஜிகா வைரஸ் நோய் வலிமையோடு பரவுவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் மார்கரெட் சான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
காய்ச்சல்
தோல்களில் சொறிபோன்ற படர்வு
கை, கால்களின் மூட்டுகளில் வலி
தசை வலி
வறட்சி
உடலில் சோர்வும் ஏற்படுதல்
குழந்தைகள் மீதான தாக்கம்
இந்த நோய் குழந்தைகளிடம் பெருமளவில் பரவிவருகிறது. பிரேசிலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு பரவுகிறது. இந்த நோயின் பாதிப்போடு பிறக்கும் குழந்தைகள் தலைசிறுத்து வினோதமாக பிறக்கின்றனர், மூளை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
இது எதிர்கால சந்ததியை பாதித்துவிடும் என்பதால் பாதிக்கப்பட்ட நாடுகள் பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன.
மனிதர்களை அதிகமாய் கொல்லும் உயிரினங்களில் ’டாப் டென்’ ல் முதல் இடத்தில் இருப்பது கொசுதான்.
அதனால், இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவனும் கொசுக்களும் இருந்தால் போதும் அந்த பகுதி முழுதுமே நோய் பரவுவது உறுதி.
கனடா, சிலி நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலுமே ’ஏடிஸ்’ கொசுக்கள் இருக்கிறது.
ஆனால், எங்கு சென்றாலும் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக கூறப்படுகிறது.
கொசுக்கள் ஒழிப்பே நோய் தடுப்பு
நோய் பிடித்திருப்பதைவிட பரவுவதுதான் கொடியதாக உள்ளது. கொசு உற்பத்திக்கான சூழலை அழிப்பது.
கொசு கடிப்பதை குறிப்பாக பகல் நேரங்களில் தவிர்ப்பது ஜிகா, டெங்கு, சிக்கன்குன்யா உட்பட்ட அனைத்து நோய்களுக்கும் முன்னெச்சரிக்கையாகும்.
அருகில் தேங்கும் நீர்நிலைகள் சாக்கடையாகமல் அப்புறப்படுத்துவது. வீட்டின் பயன்பாட்டுக்குரிய நீர்பாத்திரங்களை மூடிவைப்பது.
கொசு உற்பத்தி மூலங்களான குப்பைகளை அகற்றுவது, அப்புறப்படுத்தும் வரை மூடிவைப்பது நிலத்தடி கழிவுநீர் கால்வாய்களும் தடைபடாமலும் திறந்துகிடக்காமலும் பார்த்துக்கொள்வது கொசு வளர்ச்சியை ஓரளவு ஒழிக்க உதவும்.
வீடுகளின் ஜன்னல்களிலும் படுக்கையறையிலும் கொசுவலை, மற்றும் தடுப்புமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
எங்கு சுற்றியும் இயற்கையிடமே சரண்
நவீன உலகத்தில் கொசு உற்பத்தி பெருகிவருவது எல்லா நாடுகளிலுமே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
முன்பெல்லாம் ஓரிரு மாதங்கள் மட்டுமே கடித்த கொசுக்கள் இப்போது ஆண்டு முழுதும் கடிக்கிறது.
ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் என நன்னீர் நிலைகள் அருகிப்போனது.
அங்கெல்லாம் குப்பைகள் பெருகிப்போனது. அனைவரும் அறிந்ததே, அதற்கும் கொசு வளர்ச்சிக்கும் தொடர்புகள் உண்டு.
தவளை, தும்பிகள் போன்ற சிறு உயிரினங்கள் கொசுக்களையும் அதன் வளர்ச்சிக்கான கருக்களையும் உணவாக்கிக் கொண்டதால், கொசுக்களின் வளர்ச்சி கட்டுப்பாட்டில் இருந்தது. இயற்கை நீர்நிலைகள் குறைவால் அந்த உயிர்களும் குறைந்தன.
இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் குறைந்தாலும் அழிந்தாலும் அதன் எதிர் விளைவு எதிர்காலத்தில்தான் தெரியவரும்.
கொசுக்களை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நாடுகள் நாடுவது நிச்சயம் வெற்றிபெறும்.
எங்கோ ஒரு காட்டில் விலங்குகளுக்கோ, நாகரீகமடையாத பழங்குடியினருக்கோ ஒரு கொடிய தொற்றுநோய் இருந்தாலும் அது ஒட்டு மொத்த உலக சமுதாயத்தையும் பாதிக்கிறது. அதை தடுப்பது போராட்டமாகிறது. நோயிலும் உலகம் ஒரு குடும்பமாகிறது.
ஒழிக்கமுடியாத கொசுக்களே இதற்கு இடைத்தரகர் வேலைபார்க்கிறது. இதிலிருந்தாவது, மனிதனுக்கு முழுஇயற்கை சூழலை பாதுகாக்கும் பொறுப்பு தேடிவந்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.
-மருசரவணன்
Image Courtesy- Getty Images
டெங்கு, சிக்கன்குன்யாவை பரப்பும் ’ஏடிஸ்’(Aedes) என்ற கொசுக்களால்தான் இந்த ஜிகா வைரஸ் நோயும் பரப்பப்படுகிறது. ஜிகா காடுகளில் வாழும் குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது 1947 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே பெயர் காரணமானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் யாருக்கும் வரலாம்.
2014ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி ஜிகா வைரஸ் ஈஸ்டர் தீவு பழங்குடியினரிடமிருந்து பரவியதை சிலி நாடு கண்டறிந்தது. 2015ம் ஆண்டு மே மாதத்தில் வடகிழக்கு பகுதியிலிருந்து பரவுவதை பிரேசில் கண்டறிந்தது.
இந்த நோய் தாக்குவதால் உடனடியாக மரணம் நேர்வதில்லை என்றாலும், கவனிக்காமல் விடப்பட்டால் அதிகமாகி பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.
ஜிகா வைரஸ் நோய் வலிமையோடு பரவுவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் மார்கரெட் சான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அறிகுறிகள்:
கொசு கடித்து 2-7 நாட்களில் நோய்க்கான அறிகுறிகள் தென்படும்.காய்ச்சல்
தோல்களில் சொறிபோன்ற படர்வு
கை, கால்களின் மூட்டுகளில் வலி
தசை வலி
வறட்சி
உடலில் சோர்வும் ஏற்படுதல்
குழந்தைகள் மீதான தாக்கம்
இந்த நோய் குழந்தைகளிடம் பெருமளவில் பரவிவருகிறது. பிரேசிலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு பரவுகிறது. இந்த நோயின் பாதிப்போடு பிறக்கும் குழந்தைகள் தலைசிறுத்து வினோதமாக பிறக்கின்றனர், மூளை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
இது எதிர்கால சந்ததியை பாதித்துவிடும் என்பதால் பாதிக்கப்பட்ட நாடுகள் பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன.
பரவல் தடுப்பு நடவடிக்கை
ரத்த பரிமாற்றம் மற்றும் உடலுறவினாலும் இந்த நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எல்லா சமயத்திலும் உறுதியல்ல.மனிதர்களை அதிகமாய் கொல்லும் உயிரினங்களில் ’டாப் டென்’ ல் முதல் இடத்தில் இருப்பது கொசுதான்.
அதனால், இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவனும் கொசுக்களும் இருந்தால் போதும் அந்த பகுதி முழுதுமே நோய் பரவுவது உறுதி.
கனடா, சிலி நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலுமே ’ஏடிஸ்’ கொசுக்கள் இருக்கிறது.
ஆனால், எங்கு சென்றாலும் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக கூறப்படுகிறது.
கொசுக்கள் ஒழிப்பே நோய் தடுப்பு
நோய் பிடித்திருப்பதைவிட பரவுவதுதான் கொடியதாக உள்ளது. கொசு உற்பத்திக்கான சூழலை அழிப்பது.
கொசு கடிப்பதை குறிப்பாக பகல் நேரங்களில் தவிர்ப்பது ஜிகா, டெங்கு, சிக்கன்குன்யா உட்பட்ட அனைத்து நோய்களுக்கும் முன்னெச்சரிக்கையாகும்.
அருகில் தேங்கும் நீர்நிலைகள் சாக்கடையாகமல் அப்புறப்படுத்துவது. வீட்டின் பயன்பாட்டுக்குரிய நீர்பாத்திரங்களை மூடிவைப்பது.
கொசு உற்பத்தி மூலங்களான குப்பைகளை அகற்றுவது, அப்புறப்படுத்தும் வரை மூடிவைப்பது நிலத்தடி கழிவுநீர் கால்வாய்களும் தடைபடாமலும் திறந்துகிடக்காமலும் பார்த்துக்கொள்வது கொசு வளர்ச்சியை ஓரளவு ஒழிக்க உதவும்.
வீடுகளின் ஜன்னல்களிலும் படுக்கையறையிலும் கொசுவலை, மற்றும் தடுப்புமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
எங்கு சுற்றியும் இயற்கையிடமே சரண்
நவீன உலகத்தில் கொசு உற்பத்தி பெருகிவருவது எல்லா நாடுகளிலுமே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
முன்பெல்லாம் ஓரிரு மாதங்கள் மட்டுமே கடித்த கொசுக்கள் இப்போது ஆண்டு முழுதும் கடிக்கிறது.
ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் என நன்னீர் நிலைகள் அருகிப்போனது.
அங்கெல்லாம் குப்பைகள் பெருகிப்போனது. அனைவரும் அறிந்ததே, அதற்கும் கொசு வளர்ச்சிக்கும் தொடர்புகள் உண்டு.
தவளை, தும்பிகள் போன்ற சிறு உயிரினங்கள் கொசுக்களையும் அதன் வளர்ச்சிக்கான கருக்களையும் உணவாக்கிக் கொண்டதால், கொசுக்களின் வளர்ச்சி கட்டுப்பாட்டில் இருந்தது. இயற்கை நீர்நிலைகள் குறைவால் அந்த உயிர்களும் குறைந்தன.
இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் குறைந்தாலும் அழிந்தாலும் அதன் எதிர் விளைவு எதிர்காலத்தில்தான் தெரியவரும்.
கொசுக்களை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நாடுகள் நாடுவது நிச்சயம் வெற்றிபெறும்.
எங்கோ ஒரு காட்டில் விலங்குகளுக்கோ, நாகரீகமடையாத பழங்குடியினருக்கோ ஒரு கொடிய தொற்றுநோய் இருந்தாலும் அது ஒட்டு மொத்த உலக சமுதாயத்தையும் பாதிக்கிறது. அதை தடுப்பது போராட்டமாகிறது. நோயிலும் உலகம் ஒரு குடும்பமாகிறது.
ஒழிக்கமுடியாத கொசுக்களே இதற்கு இடைத்தரகர் வேலைபார்க்கிறது. இதிலிருந்தாவது, மனிதனுக்கு முழுஇயற்கை சூழலை பாதுகாக்கும் பொறுப்பு தேடிவந்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.
-மருசரவணன்
Image Courtesy- Getty Images
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.