தஞ்சாவூரில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து
584 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 37 ஆயிரத்து 550 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
தஞ்சாவூர் ஆயதப்படை மைதானத்தில் இன்று (26.01.2016) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளையும், அவர்களின் வாரிசுதாரர்களையும் கைத்தறி ஆடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர் திரு.என்.எம்.மயில்வாகணன் அவர்களுடன் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தமிழக அரசின் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கூட்டுறவுத் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், முன்னாள் படைவீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, மாவட்ட விளையாட்டு துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துதுறை, மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வாள்ச்சித்திட்டம், இந்திய செஞ்சுலுவை சங்கம், கருவூலத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தொழில் நுட்ப கல்வித்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை 31 பேருக்கு காவலர் பதக்கங்களையும், பல்வேறு துறைகள் சார்பில் 584 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 37 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தூய மிக்கேல் உயர்நிலைப்பள்ளி, மாதாக்கோட்டை, கமலா சுப்ரமணியன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நல சங்கம், போன்ற பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இக்கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் தஞ்சாவூர் காவல்துறை துணைத்தலைவர் திரு.டி.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், பயிற்சி ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், மாநகராட்சி மேயர் திருமதி. சாவித்திரிகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஜெய்னூலப்தீன், வட்டாட்சியர் திரு.பா.சுரேஷ், மற்றும் துணை ஆட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
584 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 37 ஆயிரத்து 550 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
தஞ்சாவூர் ஆயதப்படை மைதானத்தில் இன்று (26.01.2016) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளையும், அவர்களின் வாரிசுதாரர்களையும் கைத்தறி ஆடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர் திரு.என்.எம்.மயில்வாகணன் அவர்களுடன் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தமிழக அரசின் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கூட்டுறவுத் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், முன்னாள் படைவீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, மாவட்ட விளையாட்டு துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துதுறை, மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வாள்ச்சித்திட்டம், இந்திய செஞ்சுலுவை சங்கம், கருவூலத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தொழில் நுட்ப கல்வித்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை 31 பேருக்கு காவலர் பதக்கங்களையும், பல்வேறு துறைகள் சார்பில் 584 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 37 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தூய மிக்கேல் உயர்நிலைப்பள்ளி, மாதாக்கோட்டை, கமலா சுப்ரமணியன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நல சங்கம், போன்ற பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இக்கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் தஞ்சாவூர் காவல்துறை துணைத்தலைவர் திரு.டி.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், பயிற்சி ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், மாநகராட்சி மேயர் திருமதி. சாவித்திரிகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஜெய்னூலப்தீன், வட்டாட்சியர் திரு.பா.சுரேஷ், மற்றும் துணை ஆட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.