இதில் தரகர்தெரு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 11 பேர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 2 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மீதமுள்ள 9 பேர்கள் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்பிறகு மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலையில் நிர்வாகக்குழு கூட்டம் கூடியது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: எம். நெய்னா முஹம்மது ( ஆஃப்ரின் )
உதவித்தலைவர்- I : எம். எம். முஹம்மது மீராஷாகிப்
உதவித்தலைவர்- II: எஸ்.எம்.ஜி பசூல்கான்
செயலாளர்: எம்.ஒய் அஸ்ரப் அலி
இணை செயலளார்: கே.எம் முஹம்மது அர்ஷாத்
பொருளாளர்: எஸ். ராஜிக் அஹமது
உறுப்பினர்கள்:
1. எஸ். ஹாஜா முகைதீன்,
2. கே.எம் நெய்னா மலை,
3. எம்.எம் அஸ்லம்
தமிழ்நாடு வக்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தரகர் தெரு மஹல்லாவாசிகள் சார்பில் துண்டு பிரசுரம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
யாருக்கு இந்த அறிவிப்பு! நீங்களும் சரி தான் இதற்க்கு முந்தின பஞ்சாயத்தும் சரிதான் அப்படியென்ன தெருவுக்கு செய்துவிட்டீர்கள்? ஒரு தனிப்பட்ட மனிதனோடு பொராமைக்கொள்ளும் நீங்கள் அவரை விட தெருவுக்கு நல்ல காரியங்கள் செய்ததுண்டா?
ReplyDeleteசமீபத்தில் பெய்த மழையால் விளையாட்டு திடலில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசும்பொழுது அதனை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் இவர்கள் எங்கே இருந்தார்கள்? ஆளுமைத் திறமை இல்லாதவர்கள் பதவில் இருந்து மக்களுக்கு என்ன பயன்? திறமையானவர்களுக்கு வழிவிடலாம்.... உங்கள் பெயர் போர்டில் இருப்பதுப்போல் சாதனை லிஸ்டாக மாற வாழ்த்துக்கள்.