அதிரையில் லயன்ஸ் சங்கம் - தஞ்சை கேன்சர் சென்டர் ஆகியோர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நேற்று காலை நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளியில் நடந்தது.
தஞ்சை கேன்சர் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் டாக்டர் ஜீவானந்தம், டாக்டர் தீனா மற்றும் மருத்துவ குழுவினர்கள் முகாமில் கலந்துகொண்ட 117 பேருக்கு பரிசோதனைகளை செய்தனர்.
முன்னதாக தஞ்சை கேன்சர் சென்டர் அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் அப்துல் ஹக்கீம், நிர்வாக கமிட்டி உறுப்பினர் டாக்டர் கெளசல்யா ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 26 பேருக்கு நோயின் ஆரம்ப நிலை அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தொடர் சிகிச்சை தஞ்சை கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் ஏற்பாடுகளை அதிரை லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி, பொருளாளர் எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, ஜலீலா முஹம்மது மொய்தீன், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், செல்வம், என்.யூ ராமமூர்த்தி ( பி.எம்.ஜே.எஃப் ), சாரா அஹமது, லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் செய்தனர். தஞ்சை கேன்சர் சென்டர் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஒருங்கினைத்தார்.
முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் வேண்டிய உதவிகளை செய்தனர்.
தஞ்சை கேன்சர் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் டாக்டர் ஜீவானந்தம், டாக்டர் தீனா மற்றும் மருத்துவ குழுவினர்கள் முகாமில் கலந்துகொண்ட 117 பேருக்கு பரிசோதனைகளை செய்தனர்.
முன்னதாக தஞ்சை கேன்சர் சென்டர் அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் அப்துல் ஹக்கீம், நிர்வாக கமிட்டி உறுப்பினர் டாக்டர் கெளசல்யா ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 26 பேருக்கு நோயின் ஆரம்ப நிலை அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தொடர் சிகிச்சை தஞ்சை கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் ஏற்பாடுகளை அதிரை லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி, பொருளாளர் எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, ஜலீலா முஹம்மது மொய்தீன், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், செல்வம், என்.யூ ராமமூர்த்தி ( பி.எம்.ஜே.எஃப் ), சாரா அஹமது, லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் செய்தனர். தஞ்சை கேன்சர் சென்டர் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஒருங்கினைத்தார்.
முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் வேண்டிய உதவிகளை செய்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.