எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.
இந்த நிலையில் TNTJ அதிரை கிளை சார்பில் அதிரையின் பிராதான பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடை பயண பேரணி அதிரையின் முக்கிய வீதிகளில் நடத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட தவ்ஹீத் ஜமாத்தினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேரணி அதிரை தவ்ஹீத் பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றது. ஈசிஆர் சாலை வழியாக, பிலால் நகர், மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, நடுத்தெரு, வாய்க்கால் தெரு, புதுத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஹாஜா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது அங்கு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்பு வீடுகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வாகன பிரச்சார ஸ்டிக்கர்ஸ் வழங்கப்பட்டது.
இறுதியில் பேரணி அதிரை பேரூந்து நிலையம் வந்தடைந்தன. அங்கு TNTJ அதிரை கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பிரசாரகரும், அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வருமாகிய அஸ்ரப்தீன் ஃபிர்தெளசி கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பிரசாரகர் முஜாஹித் சொற்பொழிவு ஆற்றினார். இதில் தவ்ஹீத் ஜமாத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
இந்த நிலையில் TNTJ அதிரை கிளை சார்பில் அதிரையின் பிராதான பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடை பயண பேரணி அதிரையின் முக்கிய வீதிகளில் நடத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட தவ்ஹீத் ஜமாத்தினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேரணி அதிரை தவ்ஹீத் பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றது. ஈசிஆர் சாலை வழியாக, பிலால் நகர், மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, நடுத்தெரு, வாய்க்கால் தெரு, புதுத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஹாஜா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது அங்கு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்பு வீடுகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வாகன பிரச்சார ஸ்டிக்கர்ஸ் வழங்கப்பட்டது.
இறுதியில் பேரணி அதிரை பேரூந்து நிலையம் வந்தடைந்தன. அங்கு TNTJ அதிரை கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பிரசாரகரும், அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வருமாகிய அஸ்ரப்தீன் ஃபிர்தெளசி கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பிரசாரகர் முஜாஹித் சொற்பொழிவு ஆற்றினார். இதில் தவ்ஹீத் ஜமாத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.