.

Pages

Monday, January 25, 2016

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி !

தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை  ரயில்  நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ரயில் நிலையம், காந்திஜி சாலை, கீழவீதி வழியாக சங்கீத மகால் சென்றடைந்தது.  பேருந்துகளில் பயணம் செய்தவர்களிடம் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பது கட்டாயம் தொடர்பான துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கப்பட்டது.

இப்பேரணியில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தமிழ்வேள் உமாமகேஸ்வரனார் கரந்தை கலைக்கல்லூரி, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பான்செக்கார்ஸ் மகளிர் கல்லூர், அன்னை வேளாங்கண்ணி  கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர்கள், ரெட் கிராஸ் யூத் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

சங்கீத மகாலில் வாக்காளர் தின விழா நடைபெற்றது.  விழாவில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கியும், புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:-
இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்ற வகையில் ஒவ்வொரு ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற வாக்காளர்கள் சரியாக பயன்படுத்தும் வகையில் வாக்களிக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று  பதிவு அலுவலர்கள், பொது மக்கள் பங்களிப்புடன் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனும், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் சரியான முறையில், நியாயமான வகையிலும், எந்தவித விருப்பு வெறுப்பிற்கு இடமின்றி வாக்களிக்க வேண்டுமென உறுதியேற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.  ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தம் விதமாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என  மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசினார்.

முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என்.எம்.மயில்வாகணன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திரு.கு.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு.த.ப.ஜெய்பீம், மாநகராட்சி ஆணையர் திரு.த.குமார், அரசு குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிங்காரவேல், வட்டாட்சியர்கள் திரு.பா.சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் திரு.கணேஷ்வரன், ரெட் கிராஸ் திரு.ராஜமாணிக்கம், ஜெயக்குமார், ஷேக் நாசர், முத்துகுமார் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.