.

Pages

Monday, January 18, 2016

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் !

தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: 
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஆட்டோ ஒட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றது.

இம்முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, உடல் எடை, கண் பரிசோதனை போன்றவை பரிசோதிக்கப்படுகின்றது.  ஓட்டுநர்கள், அவ்வப்பொழுது உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  எனவே இரவு பகல் பாராது உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடல் குறித்த முழு பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.  இச்சிறப்பு முகாம் மட்டுமின்றி தாங்களாகவே அரசு மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து தேவையான சிகிச்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இம்முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.ராஜ்குமார் (தஞ்சாவூர்), ஆய்வாளர்கள் திரு. விஜயகுமார், திரு.பிரபாகரன் மற்றும் 600 மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.