அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிழமேல் பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 9.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டன.
இதை அடுத்து அதிரை பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் டாக்ஸி வாகனங்கள் இந்த பகுதியில் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு நடந்து வந்தது.
இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் தெருகிராம மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி அதிரை ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து இந்த பகுதியில் தனியார் டாக்ஸி வாகனங்கள் நிறுத்தி வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் வாகன ஆக்கிரமிப்பை அகற்ற இன்று காலை அதிரை வருகை தந்த பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன் தலைமயிலான வருவாய் துறை அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களை அப்புறப்படுத்த வாகன ஓட்டுனர்கள் - உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு எதிரே அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒட்டிய பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதை அடுத்து அதிரை பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் டாக்ஸி வாகனங்கள் இந்த பகுதியில் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு நடந்து வந்தது.
இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் தெருகிராம மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி அதிரை ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து இந்த பகுதியில் தனியார் டாக்ஸி வாகனங்கள் நிறுத்தி வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் வாகன ஆக்கிரமிப்பை அகற்ற இன்று காலை அதிரை வருகை தந்த பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன் தலைமயிலான வருவாய் துறை அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களை அப்புறப்படுத்த வாகன ஓட்டுனர்கள் - உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு எதிரே அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒட்டிய பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.