.

Pages

Thursday, January 14, 2016

பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் உஷார் !

புற்றுநோய் ஏன் வருகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் எதனால், எந்த காரணிகளால் வரும் என்று மருத்துவ உலகம் பட்டியலிடும். நகம், முடி தவிர்த்து ரத்தம், எலும்பு, கண், வயிறு, மூளை என உடலில் எந்த ஒரு உறுப்பிலும் புற்றுநோய் வரக்கூடும்.

முகேஷ் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதில், அவர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக சொல்வார்கள். அவருக்கு வாயில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தினால், வாய், நுரையீரல் மட்டும் பாதிக்கும் என்று இல்லை. உணவுக் குழாய், இரைப்பை என உடலின் எந்த ஒரு பகுதியிலும் பீடி, சிகரெட் புற்றுநோயாக உருவெடுக்கலாம் என்று சொல்கின்றனர் மருத்துவர்கள்.

1990 - 2009 காலக்கட்டத்தில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் 30ல் முதல் 84 வயதுக்கு உட்பட்ட ஆண்களின் வயிறு இரைப்பை புற்றுநோய் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 65,553 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 116 பேருக்கு இரைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 51-க்கும் மேற்பட்டவர்கள் மீனவர்கள், விவசாயிகள். உடலுழைப்பு குறைந்த ஒயிட் காலர் வேலையில் உள்ளவர்களின் 25-க்கும் மேற்பட்டவர்களுக்கு இரைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் 22 வயதுக்கு முன்பிருந்தே பீடி, சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி இதழில் வெளியாகியுள்ளது.

பீடியும், சிகரெட்டும் அந்த பாக்டீரியாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், பீடியின் எண்ணிக்கையையும், புகைப்பதின் கால அளவையும் பொறுத்தும், மது அருந்துவதின் அளவையும் பொறுத்தே இரைப்பை புற்றுநோயின் தாக்கம் அமையும் என்றும் கண்டறிந்துள்ளனர். ஆச்சர்யம் என்வென்றால், சிகரெட் குடிப்பவர்களை விட பீடி குடிப்பவர்களுக்கே இரைப்பை புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்று டாக்டர்கள் கை காட்டுவது எச்.பைலரி (helicobacter pylori) என்கிற பாக்டீரியாவைத்தான். அந்தக் காலத்தில் காரமான உணவைச் சாப்பிட்டால் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் ஏற்படும் என்று சொல்லிவந்தனர். ஆனால், வயிற்றுப் புண் ஏற்பட, எச்.பைலரி பாக்டீரியாதான் காரணம் என்று மருத்துவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்தனர். பீடி, சிகரெட் புகைக்கும்போது இந்த எச்.பைலரி பாக்டீரியா அதிக அளவில் தூண்டப்படுகிறது. இது வெளியிடும் நச்சு, வயிற்றுச் சுவரை அரிக்க ஆரம்பிக்கிறது. நாளடைவில் இந்தப் புண் புற்றுநோயாக மாறுகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

பீடி, சிகரெட்டை கைவிட்டால் இரைப்பை புற்றுநோயில் இருந்து தப்பலாம்!

பி.கமலா
நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.