.

Pages

Tuesday, January 26, 2016

அதிரையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை !

அதிராம்பட்டினம், ஜனவரி 26
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஆறுமுககிட்டங்கி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி ஏஜெண்ட். இவரது மகள் சுலோச்சனா ( வயது 19 ). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வகுப்பறை மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன், அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின்விசிறியில் தொங்கிகொண்டிருந்த பிரதத்தை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பின்னர் பிரத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 comment:

  1. Very sad news ;

    why these things happening wide literature community
    Must educate them self confidence, values of life, and the commitment to social responsibility which is start from home

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.