தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஆறுமுககிட்டங்கி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி ஏஜெண்ட். இவரது மகள் சுலோச்சனா ( வயது 19 ). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வகுப்பறை மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன், அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின்விசிறியில் தொங்கிகொண்டிருந்த பிரதத்தை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பின்னர் பிரத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Very sad news ;
ReplyDeletewhy these things happening wide literature community
Must educate them self confidence, values of life, and the commitment to social responsibility which is start from home