.

Pages

Wednesday, January 20, 2016

மாவட்ட ஆட்சியருடன் அதிரை நியூஸ் குழுவினர் சந்திப்பு !

மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் அவர்களை அதிரை நியூஸ் குழுவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பில் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம், 2002 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட 'சமூக விழிப்புணர்வு பக்கங்கள்' நூல் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் மே,2016 ல் அதிரை நியூஸ் சார்பில் நடத்த இருக்கின்ற மாபெரும் அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஏற்று நடத்தி தர மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

சந்திப்பின் போது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர்கள் அன்சாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, கவுன்சிலர் முஹம்மது செரீப், நவாஸ் கான், AVM சாகுல் ஹமீது, மரைக்கா கபீர் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.