.

Pages

Saturday, January 30, 2016

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா !

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்துக்காக 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானர்வர்களை தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திர தினம் - குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படும்.

இந்நிலையில் நாடு முழுவதும் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட்டது.

இதில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் ஹாஜி M.B. அபூபக்கர். இவருக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 26 ந்தேதி நடந்த குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.

இதையொட்டி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் எதிர்வரும் 01-02-2016 அன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1 comment:

  1. பல குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் அதுவும் குறுப்பிட்ட சங்கத்தில் பாராட்டு விழ காணப்போகும் கோட்டை அமீரை பற்றி; அவரின் சாதனைகள் பற்றி விளக்கம் தருவார்களா? அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த சமய நல்லிணக்கத்தில் (நிகழ்ச்சியில்... )கலந்துக்கொண்டார் ? எந்த மத பிரச்சனையை தீர்த்தார்? அதற்க்கான மேற்கொண்ட முயற்சிகள் என்ன? எண்ணற்ற கேள்விகளோடு வாசகர்கள் உள்ளனர் ... பதிவை எதிர்ப்பார்ப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.