இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த த.மு.மு.க முன்னால் நகரத் தலைவர் தாவூது கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புரப்படுத்தக்கோரி பேரூராட்சியில் புகார் தெரிவித்தார். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை.
இதனால் அதிர்ப்தி அடைந்த த.மு.மு.க நிர்வாகி தாவூது நேற்று காலை ரஹ்மத் நகரில் தேங்கியிருந்த குப்பைகளில் 2 சாக்குகளில் அள்ளிக் கொண்டு வந்து பேரூராட்சி வாசலில் கொட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி அலுவலர்கள் உடனடியாக குப்பைகளை அகற்றப்படும் என்று உறுதி கூறியதால் தாவூது அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இது குறித்து தாவூது கூறுகையில்:
பலமுறை குப்பைகளை அப்புரப்படுத்தச் சொல்லி அழுத்து போய்விட்டது. அதனால் வேறு வழியின்றி குப்பைகளை அள்ளிக் கொண்டு கொட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இனியும் அலட்சியப்படுத்தினால் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கொட்டவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
இப்படியுமா
ReplyDeleteபேரூராட்சி வாசலில் குப்பையைக் கொட்டியதை அல்லிடனுவா இல்ல அதையும் அல்லாம வச்சிகிரானுவா
ReplyDeleteபேரூராட்சி வாசலில் குப்பையைக் கொட்டியதை அல்லிடனுவா இல்ல அதையும் அல்லாம வச்சிகிரானுவா
ReplyDelete