.

Pages

Thursday, January 21, 2016

குப்பைகள் சரிவர அள்ளாததால் பேரூராட்சி வாசலில் குப்பையைக் கொட்டி போராட்டம் !

முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு குப்பைகள் சரி வர அள்ளப்படாததால் நகர் முழுவதும் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் குப்பைகளிலிருந்து பல்வேறு துர்நாற்றங்கள் வீசி வருவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது மூக்கைப்பிடித்துக் கொண்டு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி 3-வது வார்டு ரஹ்மத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசல் அருகே சாலையில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கி உள்ளதால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் சென்று வர அறுவிருப்பாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த த.மு.மு.க முன்னால் நகரத் தலைவர் தாவூது கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புரப்படுத்தக்கோரி பேரூராட்சியில் புகார் தெரிவித்தார். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை.

இதனால் அதிர்ப்தி அடைந்த த.மு.மு.க நிர்வாகி தாவூது நேற்று காலை ரஹ்மத் நகரில் தேங்கியிருந்த குப்பைகளில் 2 சாக்குகளில் அள்ளிக் கொண்டு வந்து பேரூராட்சி வாசலில் கொட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி அலுவலர்கள் உடனடியாக குப்பைகளை அகற்றப்படும் என்று உறுதி கூறியதால் தாவூது அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


இது குறித்து தாவூது கூறுகையில்: 
பலமுறை குப்பைகளை அப்புரப்படுத்தச் சொல்லி அழுத்து போய்விட்டது. அதனால் வேறு வழியின்றி குப்பைகளை அள்ளிக் கொண்டு கொட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இனியும் அலட்சியப்படுத்தினால் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கொட்டவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 
  

3 comments:

  1. பேரூராட்சி வாசலில் குப்பையைக் கொட்டியதை அல்லிடனுவா இல்ல அதையும் அல்லாம வச்சிகிரானுவா

    ReplyDelete
  2. பேரூராட்சி வாசலில் குப்பையைக் கொட்டியதை அல்லிடனுவா இல்ல அதையும் அல்லாம வச்சிகிரானுவா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.