அதிரை பேரூராட்சி பொதுநிதி மற்றும் தஞ்சை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் 'தொகுதி மேம்பாடு நிதியை கொண்டு அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கடைகள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டன.
பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 20 முதல் 30 வரை டாக்சி வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வந்தனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகம் தனியார் டாக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டது.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தனியார் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிழமேல் பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 9.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் தெருகிராம மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி அதிரை ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து இந்த பகுதியில் தனியார் டாக்ஸி வாகனங்கள் நிறுத்தி வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்தநிலையில் அதிரை பேருந்து நிலையம் கட்டி முடித்து பல மாதங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தக்கால் செய்தார். இதில் பேருந்து நிலையப்பகுதியின் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவரது மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ஆர் சுந்தர், நீதிபதி வி.எம் வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரை பேருந்து நிலையத்தின் வாகன ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை தாசில்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இன்று காலை பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன், வட்டாட்சியர் சேதுராமன், வட்டார போக்குவரத்துதுறை அலுவலர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன், பேராவூரணி காவல் நிலைய ஆய்வாளர் , மதுக்கூர் காவல் நிலைய ஆய்வாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நீலாவதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் அதிரை பேரூந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதையடுத்து காலியாக காணப்பட்ட அதிரை பேருந்து நிலைய நிழற்கொடை பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தனியார் டாக்ஸி வாகனங்கள் இன்றி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிரை பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் தோண்டப்பட்டு கிடந்த வடிகால் வாய்க்கால் பள்ளம் ஜேசிபி வாகனம் மூலம் மூடப்பட்டன.
அதிரை பேருந்து நிலைய முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகளில் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் நிறுத்திருந்த தட்டு வண்டி பழக்கடை உள்ளிட்டவையும் அகற்றப்பட்டது.
அதிரை பேருந்து நிலைய பகுதியில் இருந்து அகற்றப்பட்ட தனியார் டாக்ஸி வாகனங்கள் மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு எதிரே அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒட்டிய பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த தனியார் வாகன ஆக்கிரமிப்பு இன்று முடிவுக்கு வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், இந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 20 முதல் 30 வரை டாக்சி வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வந்தனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகம் தனியார் டாக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டது.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தனியார் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிழமேல் பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 9.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் தெருகிராம மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி அதிரை ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து இந்த பகுதியில் தனியார் டாக்ஸி வாகனங்கள் நிறுத்தி வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்தநிலையில் அதிரை பேருந்து நிலையம் கட்டி முடித்து பல மாதங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தக்கால் செய்தார். இதில் பேருந்து நிலையப்பகுதியின் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவரது மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ஆர் சுந்தர், நீதிபதி வி.எம் வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரை பேருந்து நிலையத்தின் வாகன ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை தாசில்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இன்று காலை பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன், வட்டாட்சியர் சேதுராமன், வட்டார போக்குவரத்துதுறை அலுவலர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன், பேராவூரணி காவல் நிலைய ஆய்வாளர் , மதுக்கூர் காவல் நிலைய ஆய்வாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நீலாவதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் அதிரை பேரூந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதையடுத்து காலியாக காணப்பட்ட அதிரை பேருந்து நிலைய நிழற்கொடை பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தனியார் டாக்ஸி வாகனங்கள் இன்றி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிரை பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் தோண்டப்பட்டு கிடந்த வடிகால் வாய்க்கால் பள்ளம் ஜேசிபி வாகனம் மூலம் மூடப்பட்டன.
அதிரை பேருந்து நிலைய முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகளில் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் நிறுத்திருந்த தட்டு வண்டி பழக்கடை உள்ளிட்டவையும் அகற்றப்பட்டது.
அதிரை பேருந்து நிலைய பகுதியில் இருந்து அகற்றப்பட்ட தனியார் டாக்ஸி வாகனங்கள் மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு எதிரே அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒட்டிய பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த தனியார் வாகன ஆக்கிரமிப்பு இன்று முடிவுக்கு வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், இந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.