.

Pages

Sunday, January 17, 2016

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய இந்திய குடியரசு தின ரத்ததான முகாம் !

துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை 15.01.2016 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சோனாப்பூர் அல் நஜ்மா அல் பரிதா தொழிலாளர் முகாமில் நடத்தியது.

இந்த ரத்ததான முகாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ரத்ததான முகாமில் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ரத்ததான முகாமிற்கான வசதிகளை சிறப்புடன் செய்து கொடுத்த அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார். மேலாளர் ஜமால் ஹாஜாவுக்கு ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் பூங்கொத்து கொடுத்து கௌரவித்தார்.

ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், பைசுர் ரஹ்மான், கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா, அபுதாகிர், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், காதர் மொகிதீன், யாக்கூப், மொகிதின், ஜாபர் சித்தீக், தமீம் அன்சாரி, காயல் வாஹித், படேஷா பஷீர், காயல் ஈசா உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

தமிழ் ஆர்வலர் விஜயராகவனின் புதல்விகள் ரத்ததானம் செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அழகிய கையெழுத்தில் எழுதி கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.

அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் சார்பில் ரத்ததானம் செயதவர்களுக்கு வேண்டிய பழங்கள் மற்றும் ஜூஸ்களை மேலாளர் அபுதாகிர், சதாம், ராஜவேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற அல் ரவாபி நிறுவனம், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.